districts

img

உதகை படகு இல்லத்தில் சாகச சுற்றுலா திட்டம்

உதகை, டிச.13 - ரூ.5 கோடி முதலீட்டில், உதகை படகு இல்லத்தில் சாகச சுற்றுலா திட் டத்திற்கான பணிகளை தமிழக சுற் றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந் தன் மற்றும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழ கத்தின்‌கீழ்‌ இயங்கி வரும்‌ உதகை படகு இல்லத்தில், அதிகளவில்‌ சுற்று லாப்‌பயணிகளை ஈர்க்கும்‌ நோக்கில்‌ பல வகையான சாகச விளையாட்டு கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன்படி இழைவரிக்‌கோடு, மாபெ ரும்‌ ஊஞ்சல், ரோலர்‌கோஸ்டர்‌, பங்கீ  ஜம்பிங்‌, தொங்கு பாலம்‌ உள்பட பல் வேறு அம்சங்கள் அறிமுகப்படுத்தப் பட உள்ளது. அதற்கான துவக்க பணி கள் திங்களன்று உதகை படகு இல் லத்தில்‌ நடைபெற்றது.

இதில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கூறுகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் உதகை படகு இல்லத்தில் முதல்முறையாக “அட்வென்சர்ஸ் ஸ்போர்ட்ஸ்” எனப் படும் சாகச விளையாட்டுகள் அறிமு கம் செய்வதற்கான பணிகள் துவங் கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பய ணிகளிடம் சாகச விளையாட்டுகள் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. சாகச சுற்றுலாவுக்கான விதிமுறைகள் தமி ழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள் ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அரசிடமிருந்து நிதி வாங்கி பணிகளை செய்யவுள் ளோம். இதில் கொல்லிமலை, ஜவ் வாது மலை, ஏலகிரி உள்ளிட்ட சில இடங்களில் தனியார் பங்களிப்பிற் கும் அனுமதி உண்டு. அவ்வாறு தனி யார் பங்களிப்புக்கு அனுமதி அளிக் கப்பட்ட 5 இடங்களில் உதகை படகு இல்லமும் ஒன்றாகும். இதற்காக ரூ.5 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

அதில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு 18 சதவிகித வருவாய் கிடைக்கும். 6  மாதங்களில் பணிகளை முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இது சுற்றுலாத் துறைக்கு பெரிய ஊக்கமளிக்கும். இதேபோல் உதகை படகு இல்லத் தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 3 ஏக்க ரில் இயற்கை சூழல் அமைந்த வனப் பகுதியில் சுற்றுலா பயணிகள் டெண்ட் அமைத்து தங்கும் வகையில் கேம்பிங் திட்டம் செயல்படுத்த உள் ளோம். இந்த சாகச விளையாட்டு களில் சுற்றுலா பயணிகளின் பாது காப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப் படும். எதிர்காலத்தில் படகு இல்ல குளங்களில் படகு வீடு திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. முட்டுக்காடு பகுதியில் படகு இல்லங்களில் மிதக் கும் உணவகம் திட்டம் தொடங்கப் பட்டு உள்ளது, என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை ஆணையாளர் சந் தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித், மண்டல மேலாளர் வெங்க டேஷ், படகு இல்ல மேலாளர் சால மோன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.