ஈரோடு, டிச. 30- ஆவின் நிர்வாகம் ஒரே மாதிரியான நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமை வகித் தார். இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஏ.எம்.முனுசாமி பேசியதாவது, மின் தொடரமைப்பு பணிகளுக்காக தென்னை மரங்கள் வெட்டப்பட்டன. மரத்திற்கு இழப்பீடாக ரூ.4 ஆயிரம் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களுக்கு அரசா ணைப்படி இழப்பீடு வழங்க வேண்டும். 400 கி.வா திட்டத்தில் மின்கம்பம் அமைத்த இடத்திற்கும், மின்கம்பி கள் செல்லும் இடத்திற்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. உடனடி யாக இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளில் மீன்பிடி கூட்டுறவு சங்கத்தினர் அரசு தீர்மா னிக்கும் தொகையை குத்தகையாக செலுத்தி மீன் பிடித்து வந்தனர். இப் பொழுது நீர்வளத்துறை மீன்பிடி உரிமையை பொது ஏலம் விடுவதற் கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏலம் விடும் உத்தரவை ரத்து செய்து, மீன் பிடி உரிமையை வழங்க வேண்டும். சத்தியமங்கலம் வட்டம், வரதம் பாளையம் கிராமத்தில் உள்ள நீர் வரத்து பள்ளத்தில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்ற வேண்டும். ஆவின் நிர்வாகத்தால் சுமார் 2லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யும் போது ஒரு டெஸ்ட், ஒன்றியத்தில் ஒரு டெஸ்ட், இடையில் ஒரு டெஸ்ட் என செய்யப் படுகிறது. ஒரு பாலுக்கு எத்தனை பக்கம் டெஸ்ட் எடுத்தால் எது உண்மையான அளவீடு? இதுகுறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் ஒரு தீர்ப்பு அளிக் கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆரம்ப சங்கங்களில் பாலை எடுக்கும் போது அங்கேயே அளவையும், டெஸ் டையும் குறித்துக் கொடுக்க வேண்டும். ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை எடுத்துச் சென்று துணை குளிரூட்டும் நிலையங்களில் ஒன்றியங்களுக்கு சென்ற பிறகு ஒரு டெஸ்ட் அளவு வரு கிறது. இதில் 1.50, 2 ரூபாய் வரை விலை குறைப்பு வருகிறது. ஆனால் அதற்கு முன்பே ஆரம்ப சங்கங் களிலிருந்து பணம் பட்டுவாடா செய் யப்பட்டு விடுகிறது. இந்த இழப்பை யார் ஏற்றுக் கொள்வது. இதனால் பல சங்கங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதனை ஒழுங்கு படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு 25 சதவிகிதம் மானியத்தில் ஆவின் கலப்பு தீவனம் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயி களுக்கு வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகம் ஒரே மாதிரியான நடை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஈரோடு - கோபி சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இடம் கையகப்படுத்தி பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அவார்டு காப்பி கிடைக்கவில்லை. அது கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும். அது கிடைத் தால் தான் இழப்பீடு போதவில்லை என்றால் நீதிமன்றம் செல்வது உள் ளிட்ட நடவடிக்கைகளுக்கு செல்ல முடியும் என குறிப்பிட்டார். இக்கூட்டத் தில் அரசு அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.