சேலம், அக்.7- குழந்தைகள் பாது காப்பில் காவல்துறையினர் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ் வரி வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் சிறப்பு (ஆட்டிசம்) குழந்தைகளுக்காக கடந்த இரண்டு தினங்களாக வர்ணம் தீட்டுதல், பேச்சு போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குழந்தை களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சனியன்று நடைபெற்றது. இதில் சேலம் சரக காவல் துறை துணைத்தலைவர் ராஜேஸ்வரி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.