புதிய தாலுகா அலுவலகம் எப்போது திறப்பு?
நாமக்கல், நவ.23- குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகே கட்டப் பட்ட புதிய தாலுகா அலுவலகம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா அலுவ லகம் கடந்த 2016 ஆம் தேதியன்று நகராட்சி அண்ணா திரு மண மண்டபத்தில் துவக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவல கம் கட்டுமான பணிகள் நகராட்சி அலுவலகம் அருகே பயணி யர் மாளிகை வளாகத்தில் 2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவு கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் தாலுகா அலுவலகத்தை திறக்க பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தற் போது கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் பெரும் பாலும் நிறைவு பெற்றது. ஆனால், இது இன்னும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் உள்ளது. இந்த கட்டடப்பணி அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. தற் போது திமுக ஆட்சி நடப்பதால், இந்த கட்டடத்தை யாரைக் கொண்டு திறந்து வைப்பது என புரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் விட்டுக்கொ டுத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த கட்ட டத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஒட்டகம், கழுதை பாலில் டீ தயாரித்து வியாபாரம் செய்த பண்ணை மீது நடவடிக்கை
கோவை, நவ.23- ஒட்டகம், கழுதை பாலில் டீ தயாரித்து வியாபாரம் செய்த பண்ணை மீது விலங்குகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டு, விலங்குகளை பறிமுதல் செய்த னர். கோவை - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், சங்க மித்ரா என்ற பெயரில் பண்ணையில், ஒட்டகம், கழுதை, குதிரை, நாய்க்குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஒட்டகம் மற்றும் கழுதையிலிருந்து கறந்த பாலில், டீ போட்டு வியாபாரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ் நாடு விலங்குகள் நல வாரியத்திற்கு தொடர்ச்சியாக புகார் கள் வந்துள்ளன. இதையடுத்து தமிழ்நாடு விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், இந்திய விலங்குகள் நல வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொண்டு, இரண்டு ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதை கள், ஒரு நாய் மற்றும் இரண்டு குட்டிகள் ஆகியவை பறி முதல் செய்தனர்.
சபரிமலை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்
கோவை, நவ.23- போத்தனூர் வழியாக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சீசனையொட்டி, சென்னையில் இருந்து கேரள மாநிலம், கோட்டயத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நவ.26, டிச.3,10,17,24,31 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்குப் புறப்படும் சென்னை - கோட்டயம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06027) மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும். கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து நவ.27, டிச.4,11,18,25, ஜன.1 ஆகிய தேதிகளில் இரவு 8.45 மணிக் குப் புறப்படும் சிறப்பு ரயிலானது, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயிலானது, பெரம் பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு உள்ளிட்ட ரயில் நிலை யங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைக்குட்டி
கோவை, நவ.23- மதுக்கரை வனச்சரகத் திற்குட்பட்ட மங்கலப்பாளை யம் பகுதியிலுள்ள தோட் டத்தில், விவசாய குட்டை யில் தண்ணீர் நிரம்பியிருந் தது. இந்நிலையில், அந்த குட்டையில் 4 வயது ஆண் யானையானது சிக்கியது. அவ் வழியாக வந்த வனத்துறை யினர் இதுகுறித்து, உயரதி காரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். பொக்லைன் இயந் திரம் கொண்டு வரப்பட்டு, குட்டையிலிருந்து யானைக் குட்டி பாதுகாப்பாக மீட்கப் பட்டது.
தாராபுரத்தில் ரயில்வே முன்பதிவு சேவையை முறையாக செயல்படுத்த சிபிஎம் கோரிக்கை
தாராபுரம், நவ. 23 - தாராபுரம் தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே முன்பதிவு சேவையை முழுநேர மும் முறையாக செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ் கோரி யுள்ளார். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் தபால்துறை அதி காரிகளுக்கு என்.கனகராஜ் மனு அனுப் பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தாரா புரம் தலைமை தபால் அலுவலகம், இங் குள்ள காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் காலை 7.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை செயல் பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தபால்துறையி னர் விளம்பரம் செய்கின்றனர். ஆனால் இந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கவுண்ட ரில் ஊழியர் நியமிக்கப்படவில்லை. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமென் றால் காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை தான் பதிவு செய்ய முடியும் என்று சொல்கி றார்கள். 12 மணி நேரம் அலுவலகம் செயல்பட் டாலும் 2 மணி நேரம்தான் ரயில்வே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக தனியார் டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகள் ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் வீதம் சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் பணம் வசூ லிக்கின்றனர். இது பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. எனவே தபால் துறை கண்காணிப்பாளர் இதுகுறித்து உரிய முறையில் விசாரணை செய்து ரயில்வே டிக்கெட் பதிவு செய்வதற்கு உண்டான முழு மையான வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள் ளப்பட்டுள்ளது.
டாக்டர், இன்ஜினியர் மட்டும் மதிப்புமிக்க படிப்புகளல்ல! மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி அறிவுறுத்தல்
திருப்பூர், நவ. 23 – டாக்டர், இன்ஜினியர், ஐஏஎஸ்., ஐபிஎஸ் படிப்புகள் மட்டுமே மதிப்புமிக்க படிப்புகள் அல்ல, ஆர்வமும், சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் விண்வெளி ஆராய்ச்சி பொறியாளர், விஞ்ஞானி ஆவதற் கான படிப்பும் ஒன்று என இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பீம் தருச்சா கூறினார். திருப்பூர் காந்திநகர் ஏவிபி டிரஸ்ட் மெட்ரி குலேஷன் பள்ளியில், சேஸ் யுவர் ட்ரீம்ஸ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற் றது. இந்த விழாவில் கலந்து கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் பீம் தருச்சா அறி வியலும், குறிக்கோளும் என்ற தலைப்பில் உரையாற்றி மாணவர்களிடையே கலந் துரையாடினார். அறிவியல் மூலம் மாணவர்களுக்கு ஏற்ப டும் நன்மையை பற்றியும், இந்த உலகத் திற்கு விஞ்ஞானிகளின் அவசியத்தை பற்றி யும், ஒருவர் ஏன் விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதை பற்றி பேச விரும்புகிறோம். மாணவர்கள் வழக்கமாக டாக்டர், எஞ்சி னியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற படிப்பு கள் மட்டும்தான் உயர் படிப்புகளாக, மதிப்பு மிக்க படிப்புகளாக பார்க்கின்றனர். இவை களை தாண்டி ஆர்வமும், சவால்களும் நிறைந்த பல படிப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் விண்வெளி ஆராய்ச்சி பொறியா ளர் அல்லது விஞ்ஞானிக்கான படிப்பு. இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யான் திட்டம். இந்திய விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் உள்நாட்டுப் பணி என்ப தால் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது வெற்றி பெற்றால், விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நான்காவது நாடு என்ற பெரு மையை இந்தியா பெறும். ககன்யானின் வெற்றி விண்வெளிப் பய ணங்களில் இன்னும் பல சோதனைகளுக்கு வழிவகுக்கும். அதற்கான சோதனை ஓட்டங் கள் நடைபெற்று வருகின்றன. ககன்யான் என் பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடையுள்ள விண்கலம் ஆகும். இதில் மூன்று பேர் சுற்றுப்பாதைக்கு சென்று புவிக்கு திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள்ளது என்று தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை அலுவலர் பதவியேற்பு
திருப்பூர், நவ. 23 – திருப்பூர் மாவட்ட சுற்று லாத்துறை அலுவலராக அரவிந்த் குமார் புதனன்று பதவியேற்றுக் கொண்டார். மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட் டத்தை உள்ளடக்கிய பூம்பு கார் சுற்றுலா அலுவலராக இருந்த அரவிந்த் குமார் திருப்பூர் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப் பட்டார். இதற்கு முன்னர் இவர் கோவை, நீலகிரி மாவட்ட சுற்றுலா அலுவல ராக பணியாற்றியுள்ளார். மாவட்டத்திலுள்ள முக் கிய சுற்றுலா தளங்களை மேம்படுத்த தொடர்புடைய துறைகளிடமிருந்து கருத் துரு பெறப்பட்டு சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.
பகுதி நேர நியாய விலைக்கடை: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருப்பூர், நவ.23- திருப்பூர் மாவட்டம், குப்பாண்டம் பாளையம் ஊராட்சி பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பகுதி நேர நியாயவிலைக்கடை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டார். அவிநாசி வட்டம், துலுக்கமுத்தூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 160 பயனா ளிகளுக்கு ரூ.87.13 லட்சம் மதிப்பீட்டி லான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வழங்கினார். இதைதொடர்ந்து, குப் பாண்டம்பாளையம் ஊராட்சி கே.2046 பழங்கரை தொடக்க வேளாண்மை கூட் டுறவு கடன் சங்க பகுதி நேர நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண் டார். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறையின் சார்பில் போதைப்பொ ருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக் களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் (பொ) ராம்குமார், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரி யப்பன், திட்ட இயக்குநர் (மகளிர் திட் டம்) வரலட்சுமி, மண்டல இணை இயக் குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட மேளாலர் (தாட்கோ) ரஞ்சித் குமார்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலு வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை
உதகை, நவ.23- தொழிலாளர் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை பெறு வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு நல நிதி சட்டத்தின் படி, நீலகிரி மாவட்டத்திலுள்ள தோட்ட நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தொழிலா ளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ.60 கணக்கிட்டு நிறு வனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர்கள் நலநிதி தொகையின் வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பாண்டு 2023 ஆம் ஆண்டு ஆண்டுக்கான தொழிலாளர்கள் நல நிதியினை 31.10.2024 ஆண்டுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நலநிதியின் செலுத்தும் தொழிலாளர்களுக் கான மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூல மாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. அதில் ஆரம்பப்பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 முதல் 12 ஆயி ரம் ரூபாய் வரை கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்க ளுக்கு தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது. தொழிலாளர்களின் மாத ஊதியம் 25 ஆயிரத்திற்குள் ஊதியம் இருக்க வேண்டும். விண்ணப்பங் கள் வாரியத்திற்கு சேர வேண்டிய கடைசி நாள் டிச.31 ஆம் தேதியாகும் என தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை உதவி ஆணையர் லெனின் கூறியுள்ளார்.
8 லாரி ஓட்டுநர்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
நாமக்கல், நவ.23- லாரிகளில் அதிகளவு கால்நடைகளை ஏற்றிச்சென்ற 8 லாரி ஓட்டுநர்களுக்கு ரூ.34 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் மிருகங்கள் வதை தடுப்பு உதவி ஆய்வாளர் தர்மராஜன் தலைமையிலான போலீசார், லாரிகளில் அதிகளவில் கால் நடைகளை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநர் ரவி உட்பட 8 ஓட்டுநர்கள் மீது நாமக்கல் 2 ஆவது குற்ற வியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில், லாரி களில் அதிக கால்நடைகளை ஏற்றி சென்ற தாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், 8 ஓட்டுநர்களையும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி விஸ்வநாதன் முன்னி லையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதி பதி, நாமக்கல்லைச் சேர்ந்த ஓட்டுநர் ரவிக்கு ரூ.5 ஆயிரம், ஓலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமிக்கு ரூ.4.800, ஈரோடு மணிகண்ட னுக்கு ரூ.4,200, சத்தியமங்கலம் முருகேச னுக்கு ரூ.6 ஆயிரம், குணசேகரனுக்கு ரூ.6,600, ஈரோடு ஜெபருல்லா என்பவருக்கு ரூ.2 ஆயிரம், நீலகிரியைச் சேர்ந்த கலிமுல்லா வுக்கு ரூ.3 ஆயிரம், கேரளாவைச் சேர்ந்த ரகிம்மோன்ட் என்பவருக்கு ரூ.3,200 அபரா தம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மொத்தமாக 8 ஓட்டுநர்களுக்கு ரூ.34 ஆயிரத்து 800 அப ராதம் விதிக்கப்பட்டது.
கோவை குற்றாலம் மீண்டும் மூடல்
கோவை, நவ.23- கோவை மாவட்டத்தில் பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணி கள் குளிப்பதற்கு தடை விதிக் கப்பட்டு, கோவை குற்றா லம் தற்காலிகமாக மூடப்பட் டது. நீர்வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும் பியதால், கடந்த திங்களன்று முதல் கோவை குற்றாலம் திறக்கப்பட்டது. இந்நிலை யில், கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிக ரித்துள்ளது. இதனால் கோவை குற்றாலம் தற்காலி கமாக மூடப்படுவதாக வனத் துறை அறிவித்துள்ளது.