எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை சேலத்தில் சுவரொட்டிகள்
சேலம், ஜூன் 8- ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான புகழேந்தியை தாக்கி யதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி சேலம் மாநகர் முழுவதும் சுவ ரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆலோசனைக்கூட்டம் கடந்த மே 19 ஆம் தேதியன்று எடப்பாடி பகுதியில் நடை பெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்றார். அப்பொழுது எடப்பாடி பழனிச்சாமி ஆதர வாளர்கள் அவரின் காரை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து எச்சரித்தனர். இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலான நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அணியினர் எடப்பாடி காவல் நிலையத்தில், தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். இந்நிலையில் அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு, மாவட்ட ஆட்சி யர் அலுவலக சாலை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதி களில் எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழ்நாடு அரசு நடவ டிக்கை எடுக்கக்கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இளம்பெண் சடலமாக மீட்பு
ஈரோடு, ஜூன் 8- காணாமல் போன மலைவாழ் இளம்பெண் கிணற்றி லிருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலையில் குன்றியை அடுத்த குஞ்சாம்பாளையத்தைச் சேர்ந் தவர் ஜெயம்மாள். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கண வனை இழந்த இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தனர். இதில் மூத்த மகள் கீர்த்தனா (24). மாதேஸ்வரன் மலை, பழையூரை சேர்ந்த வீரப்பன் மகன் வீரபத்திரன் என்ப வருக்கு திருமணம் நடந்தது. இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்தியூர் வட்டம், வேம்பத்தி கிராமத்தில் தாளக்குட்டைபுதூர் பூச்சிமுத்து என்ப வரின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர். தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த ஜூன் 5ஆம் தேதியிலிருந்து கீர்த்தனாவை காணவில்லை என வீர பத்திரன் போன் மூலம் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் 7ஆம் தேதி காலை வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்துவிட்டதாக தகவல் கூறியுள்ளார். இதுகுறித்து ஆப்பக்கூடல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள் ளனர்.
ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
தருமபுரி, ஜூன் 8- அரூர் அருகே உள்ள புளுதியூரில் நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை செய் யப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோபிநாதம் பட்டி கூட்ரோடு, புளுதியூரில் புதனன்று வாரச்சந்தை நடை பெற்றது. இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடு, கோழி களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தமிழ்நாட்டின் பல் வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்தனர். சந்தையில் மொத்தம் ரூ.42 லட்சத்திற்கு கால் நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
போலி ஆவணங்கள் தயார் செய்து சொத்து அபகரிப்பு
கோவை, ஜூன் 8- கோவையில் போலி ஆவணங் களை தயார் செய்து சொத்தை அப கரித்த, தனது முதல் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி 75 வயது முதியவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம், ஆவாரம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர பாலன் (75). இவரது முதல் மனைவி மாணிக்கம். இவர்களுக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல் லாததால், தனது முதல் மனைவியின் சம்மதத்துடன் கல்பனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து, தற்போது இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள் ளனர். இந்நிலையில், முதல் மனைவி மாணிக்கம் மற்றும் அவரது உறவி னர்கள் சந்திர பாலனுக்கு சொந்த மான வீடு மற்றும் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து, சொத்தை அபகரித்துள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலை யில், தற்போது போலீசாரை வைத்து கொண்டு தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றுவதாகவும், இது சம்மந்தமான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கோவை மாநகர காவல் ஆணையரிடம் சந்திரபாலன் புகாரளித்துள்ளார். மேலும், தனது முதல் மனைவி மற்றும் உறவினர்கள், காட்டூர் காவல் நிலைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக குறித்து பொய் செய்தி ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் கைது
திருப்பூர், ஜூன் 8- சாரயம் காய்ச்சிய ஐந்து திமுகவினர் கைது என நாளி தழ்களில் வந்தது போல பொய்யாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஆர்எஸ்எஸ் பொறுப் பாளரை திருப்பூர் காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது அன்றைய நாளிதழ்களில் செய்தியாக வந்திருந்தது. இந்த புகைப்படத்தை மார்பிங் செய்து, 5 திமுகவினர் சாராயம் காய்ச்சிய போது கைது என கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்பரிவார் அமைப்புகளால் திட்டமிட்டு பரப்பட்டு வந்தது. இதனை, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த காஞ்சி புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் சரவண பிரசாத் (52) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பல்லடம் இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிர மணியம் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சரவணபிரசாத் செய்தியை திரித்து மார்பிங் முறையில் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கில் பொய்யான செய்தியை பதிவிட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கோவையில் இருந்த சரவணபிரசாத்தை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இதுபோன்றே பல சம்பவங்களை திரித்து, சமூகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை திட்டமிட்டு பரப்பி வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் மேற்கொண்டு வருகிறோம், என்றனர்.
திமுக குறித்து பொய் செய்தி ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் கைது
திருப்பூர், ஜூன் 8- சாரயம் காய்ச்சிய ஐந்து திமுகவினர் கைது என நாளிதழ்க ளில் வந்தது போல பொய்யாக சித்தரித்து, சமூக வலைத்த ளங்களில் வெளியிட்ட ஆர்எஸ்எஸ் பொறுப்பாளரை திருப் பூர் காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் சாராயம் காய்ச்சிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது அன்றைய நாளிதழ்களில் செய்தியாக வந்திருந்தது. இந்த புகைப்ப டத்தை மார்பிங் செய்து, 5 திமுகவினர் சாராயம் காய்ச்சிய போது கைது என கடந்த சில தினங்களுக்கு சங்பரிவார் அமைப் புகளால் திட்டமிட்டு பரப்பட்டு வந்தது. இதனை, சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த காஞ்சிபு ரத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் சரவணபிரசாத் (52) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக இளைஞர் அணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் புகாரளித்தார். திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை யில் சரவணபிரசாத், செய்தியை திரித்து மார்பிங் முறையில் திமுக மீது அவதூறு பரப்பும் நோக்கில் பொய்யான செய் தியை பதிவிட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கோவையில் இருந்த சரவணபிரசாத்தை திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், இதுபோன்றே பல சம்பவங்களை திரித்து, சமூகத்தில் பதட் டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை திட்டமிட்டு பரப்பி வந்துள் ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் மேற் கொண்டு வருகிறோம், என்றனர்.
குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு கருத்தரங்கம்
அவிநாசி, ஜூன் 8- ஜூன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு அவிநாசியில் குழந்தை தொழில் உழைப் புக்கு எதிரான பிரச்சார இயக்கம் புதனன்று நடைபெற்றது. அவிநாசியில் உள்ள சி.எஸ்.இ.டி அலுவலக வளா கத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கதில் மேற்கு மண்டல அமைப்பாளர் குருசாமி வரவேற்றார். மாநில அமைப்பாளர் கருப்புசாமி, முன்னாள் மாநில அமைப்பாளர் செல்லையா நம்பி ஆகியோர் கருத்தரங்கத்தில் பேசுகையில், 18 வயதுக்கு உட்பட்ட அனைவருமே குழந்தைகள். அவர்கள் கல்வி பெறும் உரிமை உள்ளதால், கட்டாயம் அவர்கள் பள்ளியில் செல்ல வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைக ளின் கல்வியில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நூற்பாலை மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். இதில், கோவை மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் பாண்டி செல்வி, நாமக்கல் தினகரன், சேலம் ராதாகிருஷ்ணன், ஈரோடு தங்கவேல், ஆதி தமிழர் பேரவை மணி, ஜானகி, கவிதா உட்பட 40 க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகரில் 13ஆம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்
திருப்பூர், ஜூன் 8 – திருப்பூர் மாநகரில் மூன்றாவது குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் வரும் 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிறுத்தப் படும் என்று மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப் பனவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது குடிநீர் திட்டத்தில் பராமரிப்புப் பணிகள் கார ணமாக 12ஆம் தேதி திங்களன்று திருப்பூருக்கு குடிநீர் வழங் குவது நிறுத்தப்படும் என்று புதுத்திருப்பூர் பகுதி மேம் பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது. எனவே இம்மாநகரில் 60 வார்டுகளிலும் குடிநீர் பகிர்மானத்தில் செவ்வாயன்று விநியோ கம் நிறுத்தப்படும். 14ஆம் தேதி புதன்கிழமை வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும் என்று ஆணையர் பவன் குமார் வியாழனன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:25.11/60அடி நீர்வரத்து:1கனஅடி
வெளியேற்றம்:27கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 66.54/90அடி.நீர்வரத்து:163கனஅடி
வெளியேற்றம்:187கனஅடி.
7.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி, ஜூன் 8- அவிநாசியில் நடை பெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு, மொத் தம் 416 பருத்தி மூட்டைகள் கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப் பருத்தி குவிண்டால் ஒன் றுக்கு ரூ. 6,000 முதல் ரூ.7,316 வரையிலும், கொட்டுரக (மட் டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,000 முதல் ரூ. 3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7லட் சத்து 75 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வர்த்தகம் நடைபெற் றது.
தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை
கோவை, ஜூன் 8- கோவையில் இரு தலைமை தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தபால் நிலையங்கள் மூலம் கிராமப் பகுதிக ளுக்கு சேமிப்புக் கணக்குகள், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்ட திட்டங்களை கொண்டு செல்லுதல், தபால் துறை சில்லறை வர்த்தக வருவாயை அதிகரித்தல் மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு பணப்பலன்களை கொண்டு சேர்த்தல் உள்ளிட்டவை இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலை யில், கோவை கூட்செட் சாலையில் கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் மேற்கு மண்டல தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 10 முதல் மாலை 3 மணி வரையில், சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன. மாலை 4 மணி வரை மணி ஆர்டர் புக்கிங், இரவு 7 மணி வரை பதிவு தபால், பார்சல் விரைவு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் வசதிக்காக, இவ்விரு தலைமை தபால் நிலையங்களிலும் 12 மணி நேர சேவை அமல்படுத்தப் பட்டுள்ளது. இனி காலை 8 முதல் இரவு 8 மணி வரை அனைத்து வகை யான சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், வி.பி.எல்., வி.பி.பி., தபால் ஆகிய சேவைகளை, இவ்விரு தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் ரயில் பயணியிடம் நகை திருட்டு
சேலம், ஜூன் 8- சேலம் வந்தடைந்த விரைவு ரயிலில் பயணித்த பெண் ணிடம் 17 பவுன் நகையை திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை– பழனி - பாலக்காடு விரைவு ரயில் புதனன்று நள்ளிரவில் சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது குளிர்சாதன வகுப்பு பெட்டியிலிருந்து சந்தேகத்திற்கு இட மான வகையில், ஒருவர் கீழே இறங்கி சென்றார். அவரை சேலம் ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்து, அவர் வைத்தி ருந்த பையை திறந்து சோதனையிட்டனர். அதில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை இருந்தது. அதில் 17 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் போலீசார் விசாரணை மேற் கொண்டதில், திருச்சி மாவட்டம், ராம்ஜி நகரைச் சேர்ந்த முத்து ராமன் (எ) ரித்தின் என்பது தெரியவந்தது. இவர் குளிர்சாதன வகுப்பு பெட்டியில் பயணித்த பெண்ணி டம் கைப்பையை திருடியது தெரியவந்தது. இதனிடையே போலீசார் கைப்பையில் இருந்த அணைத்து வைக்கப்பட்டி ருந்த கைப்பேசியை எடுத்து ஆன் செய்தனர். அப்போது சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சுந்த ரத்தின் மனைவி சூர்யா (67) என்பவர் தொடர்பு கொண்டு பேசி னார். இதையடுத்து திருட்டுபோன கைப்பை தன்னுடையது என போலீசில் தெரிவித்தார். தொடர்ந்து சேலம் ரயில் நிலை யத்திற்கு வந்து ரயில்வே போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
விடுதிகளில் சேர அழைப்பு
ஈரோடு, ஜூன் 8- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபி னர் விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அழைப்பு விடப் பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசால் ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவி யர்களுக்கான மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 15 விடுதிகளும், மாணவிகளுக்கு 11 விடுதிகளும், கல்லூரி, பாலிடெக்னிக் செல்லும் இருபாலினருக்கும் தலா 4 விடுதிகள் உள்ளன. விடுதியில் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10 ஆம் வகுப்பு வரையிலானவர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்படும். 10,12 வகுப்பினர்க்கு சிறப்பு வழிகாட்டிகளும், மலை பிரதேச விடுதிகளில் கம்பளி மேலாடைகளும் வழங்கப் படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகா மல் இருக்க வேண்டும். தகுதியுடையோர் சம்பந்தப்பட்ட விடுதியில் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தில் செயல்படும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று ஜூன் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 94454 77855 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.