districts

img

சட்டவிரோதமாக பால் கொள்முதல் செய்தால் நடவடிக்கை

சேலம், மே 17- சட்ட விரோதமாக பால் கொள் முதல் செய்யும் தனியார் நிறுவனங் களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில் நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்க ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். தமிழக அரசில் புதிதாக பால் வளத்துறை அமைச்சராக பொறுப் பேற்ற மனோ தங்கராஜ் சேலம் ஆவின் பால் பண்ணையில் பல்வேறு நிகழ்ச் சிகளில் பங்கேற்றார். முதற்கட்டமாக  பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5.83 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி களை வழங்கியும், ரூ.34 லட்சம் மதிப் பீட்டில் புதிய ஐஸ்கிரீம் வாகனத்தை யும் தொகுப்பு குளிரிட்டும் நிலையம் ரூ1.50 கோடி மதிப்பிலும், 12 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று  இடங்களை தேர்ச்சி பெற்ற ஆவின் ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஊக் கத்தொகையும் வழங்கினார்.  இத னைத்தொடர்ந்து தலித் மற்றும் பழங் குடியினர் மக்கள் 190 பேருக்கு தீவன விதைகள் ரூ.19 லட்சம் மதிப்பில் வழங் கப்பட்டது. ரூ.2.65 கோடி மதிப்பில் தானியங்கி பால் சேகரிப்பு கருவியும்  வழங்கிய அமைச்சர், உற்பத்தியா ளர்களுக்கு போனஸ் மற்றும் ஈவுத் தொகை ரூ.27 லட்சம் மதிப்பில் வழங் கினார்.

இதனையடுத்து செய்தியாளர் களை சந்தித்த அமைச்சர் மனோ  தங்கராஜ் பேசுகையில், சட்டவிரோத மாக தனியார் பால் நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுவதை கண் காணித்து நடவடிக்கை எடுக்கப் படும். தனியார் நிறுவனங்களில் பால்  கொள்முதல் வருடம் முழுவதும் நடக் காது. ஆனால், ஆவின் நிறுவனத்தில் வருடம் முழுவதும் பால் கொள்முதல் செய்யப்படும். ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த, விவசாயிகள் பாது காக்கப்படுவார்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமல்படுத்தப்படும். பால் உற்பத்தி யாளர்கள் விவசாயிகள், மக்கள் என அன்றாடம் பயன்படுத்தும் பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. பால் உற் பத்தி இலக்கைப் பெருக்க உள்ளூர் வங்கிகள் மூலம் கூட்டுறவு சங்கங் கள் மூலம் கறவை மாடுகள் வழங்க அரசின் சார்பில் முடிவு செய்யப்பட் டுள்ளது.

2 லட்சம் கறவை மாடுகள் உடனடி யாக வழங்க ஏற்பாடு செய்யப்படும். கறவை மாடுகளுக்கு காப்பீட்டு  வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள் ளது. அனைத்து பால் பண்ணைகளி லும் விவசாயிகள் எண்ணற்ற கோரிக் கைகளை வைத்துள்ளனர். படிப் படியாக அவர்களின் கோரிக்கை  சரி செய்யப்படும். தமிழகத்தின் அனைத்து ஆவின் நிறுவனங்களை யும் ஆய்வு செய்த பின்பு மக்களுக் கும், விவசாயிகளுக்கும் பயன்பெ றும் வகையில் முடிவுகள் எடுக்கப் படும். சேலம் ஆவின் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்கும் முயற்சி உள் ளது. கழிவுநீர் ஊருக்குள் புகாத வண் ணம் பிரச்சனை சரி செய்யப்படும் என்றார்.  முன்னதாக, ஆவின் உற்பத்தியா ளர்கள் விவசாயிகள் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  இதில் ஆவின் நிர்வாக ஆணையர் மற்றும் மேலாண் இயக்குநர் சுப்பை யன், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ். கார்மேகம், ஆவின் சேலம் மேலாளர்  விஜய் பாபு, சட்டமன்ற உறுப்பினர் கள் இரா.ராஜேந்திரன், அருள் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.