districts

சட்டத்தை தவறாக பயன்படுத்துவோர் வீடுகள் முன் போராட்டம் நடத்த முடிவு

திருப்பூர், ஜூன் 14- சர்பாசி சட்டம் 31-ஐ தவறாக பயன்ப டுத்தி. விளைநிலங்களை பறிக்கும் கும் பல் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி, தவறுக்கு உடந்தையாக செயல்ப டும் வங்கி அதிகாரிகளின் வீடுகளின் முன்பு போராட்டங்கள் நடத்த உள்ள தாக விவசாயிகள் முடிவு செய்துள்ள னர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் நொய் யல் நதியை சீரமைக்க, ‘நடந்தாய் வழி  காவிரி’ திட்டத்தை உடனடியாக செயல் படுத்த வேண்டும். சர்பாசி சட்டம் 31, விவ சாய நிலத்தை வங்கி ஏல நடவடிக்கை எடுத்து விற்பனை செய்யக்கூடாது என்று சொல்கிறது. இதையெல்லாம் மீறி ரியல் எஸ்டேட் மாபியா கும்பல், வங்கி மேலாளர்கள், ரெக்கவரி ஏஜென்சிகள் விவசாய பூமிகளை குறைந்த விலையில் மதிப்பீடு செய்து  அச்சுறுத்தி மிரட்டி அபகரித்து வருகின் றன. இதை ஒன்றிய, மாநில அரசுகள் உட னடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களில் இந்த விசயத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். மேலும், சர்பாசி சட்டத்தை தவறாக  பயன்படுத்தி விளை நிலங்களை பறிக் கும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தை யாக செயல்படும் வங்கி அதிகாரிகளின்  வீடுகளின் முன்பு காத்திருப்புப் போராட் டம், உண்ணாவிரதம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.