கோவை, அக்.18 - கொங்கு மண்டலத்தை குறிவைத்து ஒன்றிய பாஜக அமைச்சர்கள் படையெடுப் பது போல் வந்து கொண்டே இருக்கின்றனர். ஆனால் பாஜக கூட்டங்களில் கட்சி நிர்வாகி கள் கூட எதிர்பார்த்த அளவில் பங்கேற்ப தில்லை. இதனால் பாஜகவிற்குள் தொடர்ந்து சலசலப்பு இருந்து வந்தது. இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி வருகை யின் போது அது வெட்டவெளிச்சமானது. தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களாக ஒன்றிய பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட் டங்களை மையப்படுத்தியே நிகழ்ச்சிகள் திட்டமிடப்படுகிறது. ஒன்றிய அமைச்சர்கள் அரசின் திட்டங்களை ஆய்வு செய்ய வருவ தாக தெரிவித்தாலும், பாஜகவிற்கான தொகுதி ஆய்வு கூட்டத்தையே நடத்தி வரு கின்றனர்.
படையெடுப்பு
செப்.6 ஆம் தேதியன்று ஆளுநர் ஆர்.என். ரவி கோவை வருகை, அதே தினத்தில் ஒன் றிய இணை அமைச்சர் எல்.முருகனின் கோவை மற்றும் உதகை நிகழ்வும் நடை பெற்றது. செப்.7, 8 ஆகிய தேதிகளில் ஒன்றிய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா கோவை வருகை, செப்.8 ஆம் தேதியன்று ஒன்றிய இணை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கோவை வருகை, அதே தினத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் வருகை தந்தனர். அதனைத் தொடர்ந்து செப்.9 ஆம் தேதியன்று ஒன்றிய இணை அமைச்சர் அன்பூர்ணாதேவி நாமக் கல் வருகை, செப்.10 ஆம் தேதியன்று ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, செப்.11 ஆம் தேதியன்று ஒன்றிய இணை அமைச்சர் புவனேஸ்வர் டுடூ சேலம் வருகை, செப்.13 ஆம் தேதியன்று ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தாமர் கோவை வருகை புரிந்தனர். செப்.28 ஆம் தேதி உத்தரபிரதேச ஆளு நர் ஆனந்திபென் படேல் கோவை வருகை, செப்.29 ஒன்றிய இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யான் உதகை வருகை என ஒரே மாதத்தில் 8 ஒன்றிய அமைச்சர்கள், 2 ஆளு நர்கள் கொங்கு மண்டத்தில் முகாமிட்டு சென் றனர். பெரும் பகுதி கட்சி நிகழ்ச்சிகளில் பங் கேற்கும் நிகழ்வுகள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் வந்தது என்னவோ அரசு நலத்திட் டங்களின் பெயரில். ஒன்றிய அமைச்சர்கள் வருகை தரும் அளவிற்கு கூட ஒன்றிய அர சின் திட்டங்கள் தமிழகத்திற்கு வருவ தில்லை. இந்த வந்து செல்கிற செலவு பணத் தையாவது திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்ய லாம் என கோவை வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். நாக்பூரே கொங்கு மண்டலத்தில் முகா மிட்டு பார்த்தாலும், பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்த அளவு உற்சாகத்தோடு களத் திற்கு வரவில்லை. மீண்டும் அக்.6 ஆம் தேதி யன்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோவை வருகை தந்ததார். அதனைத்தொடர்ந்து 10 நாள் இடைவெளி யில் அக்.16 ஆம் தேதியன்று ஒன்றிய அமைச் சர் ஸ்மிருதி ராணி மீண்டும் கோவை வருகை தந்தார். இதையடுத்து கோவை சூலூரில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட் டத்தில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந் தது. இதில் கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார். ஆனா லும், பாஜகவின் பெரும்பகுதி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
கலவரம் செய்யவே...
இதனால் மனம் நொந்த ஸ்மிருதிராணி, மாவட்ட துணைத்தலைவர்களை கைதூக்க சொன்னார். அதன் பின்னர் பொதுச்செயலா ளர்களை கைதூக்க சொன்னார். அதில் வர வேண்டிய 24 மாவட்ட துணைத்தலைவர்க ளில் வெறும் 5 பேர் மட்டுமே வந்திருந்த னர். அதேபோல் மாவட்ட பொதுச்செயலா ளர்களின் வருகையும் மிக குறைவாக இருந் தது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு ஒன்றிய அமைச்சர் மற்றும் அமைப்பின் செயலாளர் வந்திருந்தும் இவ்வளவு பேர்தான் வந்தி ருக்கிறீர்கள் எது முக்கியம்? எனது பொறுப்பு என்பது தற்காலியமானது, இது எனக்கான பொறுப்பு மட்டுமே அதிகாரமல்ல என தொடங் கிய பேச்சு ஒரு கட்டத்தில் நிர்வாகிகளை நேர டியாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறு கையில், ஒன்றிய அரசின் அதிகாரத்தை வைத்தே தேர்தலை சந்திக்கலாம் என பாஜக நினைக்கிறது. கடந்த மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் போட்டியிட்டு ஒரு வார்டு களைக்கூட கைப்பற்ற முடியவில்லை. இவர் களிடம் கலவரம் செய்ய மட்டுமே ஆட்கள் இருக்கிறார்கள். மக்கள் மனங்களை வெல்வ தற்கான அரசியல் திராணி இல்லை என்பதே இந்த ஒன்றிய அமைச்சர்களின் படையெடுப் பும், மிஸ்டுகால் பாஜகவின் செயல்பாடும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.