திருப்பூர், அக்.15- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி தின கருத்த ரங்கு செவ்வாயன்று சிக்கண்ணா கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் நடைபெற்றது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலம் பணித் திட்டம் அலகு 2 சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத் தில், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல் லூரி முதல்வர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். பேராசிரியர்கள் சக்தி செல் வம், முஸ்தாக், செல்வராசு ஆகியோர் கலாமின் பணிகளை எடுத்துரைத்தனர். பிறகு, தூய்மையே சேவை திட்டத்தில் சிறப்பாக பணியாற் றிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் தலைமையில் மாணவர்கள் கலாம் முக கவசம் அணிந்து சுற்றுப்புறத்தை பாதுகாக்க மஞ்சப்பையுன் விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.