கோவை, ஜூன் 16- பொள்ளாச்சி அடுத்த நவ மலை செல்லும் வழியில் ஒற்றை பெண் காட்டு யானை பெரும் குர லெடுத்து வன ஊழியரை எச்ச ரித்து சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனைமலை புலிகள் காப்ப கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், முள்ளம்பன்றி உள்ளிட்ட ஏராள மான வனவிலங்குகள் வசித்து வரு கிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிற நிலை யில், வனப்பகுதியில் அதிக வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வன விலங்குகள் தண்ணீரைத்தேடி நீர்நிலை பகுதிக்கு வருகிறது. இதன்தொடர்ச்சியாக, ஆழி யார் அணை மற்றும் நவமலை உள் ளிட்ட பகுதிகளில் காட்டு யானை கள், கூட்டம் கூட்டமாக சுற்றி வரு கிறது. ஆழியர் அணைப்பகுதிக ளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதால், இவ்வழியே பயணிக் கும் சுற்றுலா பயணிகளுக்கு எவ் வித ஆபத்தும் நிகழக்கூடாது என் பதற்காக வனத்துறை ஊழியர் கள் சுழற்சி முறையில் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், ஆனைமலை அடுத்த நவமலை செல்லும் வழி யில் ஏராளமான காட்டு யானைகள் முகாமிட்டது. சாலையில் சுற்றித் திரிந்த காட்டு யானை கூட்டத்தை வனத்துறை ஊழியர் ஒருவர் அடர்ந்த காட்டுக்குள் விரட்ட முயற் சித்தார். இதனால், கோபம டைந்த ஒற்றை பெண் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்து வனத்துறைஊழியரை மிரட்டும் வகையில், பெரும் குரல் எடுத்து பிளரி எச்சரித்து சென்றது. இந்த காட்சிகளைஅங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ வாக எடுத்து தனதுசமூக வலை தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங் களில் வைரலாகி வருகிறது.