அவிநாசி, நவ.12- அவிநாசி நம்பியம்பாளையத்தில் உள்ள வாரச்சந்தையில் அடிப்படை வசதி கள் இல்லாததால் பொதுமக்கள், வியா பாரிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அவிநாசி ஒன்றியம், நம்பியம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் இந்த வாரச்சந்தை உள்ளது. அவிநாசி சுற்றுப் புற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை வியாழனன்று கூடும் சந்தை யில் விற்பனைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்கின் றனர். இந்த வியாபாரிகளிட மிருந்து, கடை ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக் கப்படவில்லை. மழைக்காலங்களில் கடை கள் அமைக்க முடியாமல் மழை நீர் சூழ்ந்து விடுகிறது, பொதுமக்களும் சென்று வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியின் நிர்வாகம் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர இந்து சமய அறநிலையத்துறைக்கு அறிவுறுத்துமாறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.