districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குக

கோவை, செப்.7- குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின்  7 ஆவது மாவட்டப் பேரவைக்கூட்டம் வியாழனன்று கோவை  தாமஸ் கிளப்பில் மாவட்டத் தலைவர் எஸ்.மதன் குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைச்செயலாளர் என்.அரங்கநாதன்  துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் (பொ) எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்டப் பொரு ளாளர் பி.நடராஜன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். இதைத்தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்த வேண்டும்.  குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செந்தில்குமார், முன்னாள் மாவட்ட நிர்வாகி ஏ.ஆர்.பழனி சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநிலத்  துணைத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

11 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை

ஈரோடு, செப்.7- தாளவாடி அருகே பட்டியிலிருந்த 11 ஆடுகளை வேட்டை யாடிய சிறுத்தையால் விவசாயிகள் கவலையடைந் துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை,  புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராள மான வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து பயிர் களை சேதப்படுத்தி வருகின்றன. இதைப்போல் சிறுத்தை,  புலிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகின்றன. இந்நிலையில், ஏர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் இரவு வழக்கம் போல் புதனன்று இரவு ஆடுகளை பட்டியில் கட்டி  வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். இதையடுத்து வியாழ னன்று காலை எழுந்து பார்த்தபோது, பட்டியில் இருந்த 11  ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடு களின் கழுத்துகளில் மர்ம விலங்கு ஆழமாக கடித்த தடயங் கள் இருந்தன. இதுகுறித்து ஏர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ  இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், ஆடுகளை  கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனவே, உடனடியாக ஊருக்குள் புகுந்த சிறுத்தையை  கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயி ராஜா வுக்கு, பலியான ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெடி மருந்து குடோனில் அதிகாரிகள் ஆய்வு

தருமபுரி, செப்.7- இண்டூர் அருகே உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவ தாக கூறி வெடிமருந்து குடோனுக்கு செல்லும் சாலையை பொதுமக்கள் துண்டித்த நிலையில், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுக்கா, இண்டூர் அருகே உள்ள ராமர்கூடல் பகுதியில் தனியாருக்கு சொந்த மான வெடி மருந்து குடோன் 10 வருடங்களுக்கும் மேலாக  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வெடி மருந்து குடோன்  உரிய அனுமதியின்றி இயங்குவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குற்றஞ்சாட்டினர். மேலும், வெடி மருந்து குடோனுக்கு செல்லும் சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி துண்டித்தனர். இதுகுறித்து மூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், நல்லம்பள்ளி வட்டாட் சியர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன், வனக்காப்பாளர்கள் ரேவதி, தமிழரசி, இண்டூர் காவல் ஆய் வாளர் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று வெடி மருந்து குடோனில் ஆய்வு மேற் கொண்டனர். மேலும், சம்பந்தப்பட்ட குடோன் உரிமை யாளரிடம் உரிமம் குறித்த ஆவணங்களை கேட்டு பெற்று சரி பார்த்தனர். இதுகுறித்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் கூறு கையில், இண்டூர் அருகே ராமர்கூடல் பகுதியில் உள்ள மூர்த்தி  என்பவருக்கு சொந்தமான வெடி மருந்து குடோனுக்கான உரிமம் உள்ளிட்ட சான்றுகளை ஆய்வு செய்தோம். வரும்  2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உரிமம் அனுமதி யளித்து, வேலூர் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால்  சான்று வழங்கப்பட்டுள்ளது, என்றனர். இதையடுத்து, வெடி மருந்து குடோனுக்கு செல்லும் சாலையில் தோண்டப்பட்ட குழி மூடப்பட்டு, சரி செய்யப்பட்டது. உரிய அனுமதியின்றி வனப்பகுதியில் குழி தோண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழுதாகி நின்ற பேருந்தை பயணிகள் தள்ளி செல்லும் வீடியோ வைரல்

சேலம், செப்.7- சென்னையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆத்தூர் அருகே பழுதாகி நின்ற நிலையில்,  பேருந்தை பயணிகள் தள்ளி செல்லும் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் திற்கு சொந்தமான பல்வேறு பேருந்துகள் மிதவைப்பேருந்து மாநிலம் முழுவதும் இயக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் நாடு அரசு மிதவைப்பேருந்து ஒன்று  சென்னையிலிருந்து சேலம் நோக்கி  பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.  அப்போது ஆத்தூர் பேருந்து நிலை யத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும்  சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நரசிங்கபுரம் என்ற இடத்தில் திடீரென  சாலையின் நடுவே பேருந்து பழுதாகி நின்ற தால், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து சரி செய்ய முடியாமல் இருந்த தால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளா கினர். மேலும், சேலம் - ஆத்தூர் முக்கிய சாலையின் நடுவில் பேருந்து பழுதாகி நின்ற தாலும், காலை நேரம் என்பதாலும் போக்கு வரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். பயணிகள் பேருந்தை தள்ளிச்சென்ற காட்சி கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க  மாநில மாநாடு இன்று துவக்கம்

உடுமலை, செப்.7- உடுமலையில் தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத் தின் 8 ஆவது மாநில மாநாடு செப். 8 மற்றும்  9 ஆம் தேதிகளில் நடைபெறகிறது.  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் நலனுக்கு தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சங்கத்தின் மாநில மாநாடு திருப்பூர் மாவட்டம், உடுமலை எஸ்.வி.புரம்  பகுதியில் உள்ள விஜயா மஹாலில் நடை பெறுகிறது. இந்த மாநாட்டில், செப்.8 ஆம் தேதி யன்று முதல் நாள் நிகழ்வில், சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறார். தலைமை செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் துவக்கவுரையாற்றுகிறார். மாநாட்டில் பொதுச்செயலாளர் ஆ.அம்சராஜ், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் அறிக் கைகளை சமர்ப்பிக்கின்றனர்.  நெடுச்சாலைத்துறையின் தலைமை  பொறியாளர் இரா.சந்திரசேகரன், நெடுஞ் சாலைத்துறை திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் இரா.சரவணன் மற்றும் கோட்டப் பொறியாளர்கள் ஜெ.கு.ரமேஷ் கண்ணா, வெ.ராணி  மற்றும் தோழமை சங்கத்தினர் வாழ்த்துரையாற்றுகின்றனர். சிஐடியு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. ரங்கராஜ் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாநாட் டில் கலந்து கொள்கிறார்கள். மாலையில் எஸ்.வி.புரம் பேருந்து நிலையம் அருகில் சிறப்பு கருந்தரங்கம் நடை பெற உள்ளது.

இதில் ‘‘மாற்றத்தை நோக்கி  பயணிப்போம்’’ என, தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், ‘‘கல்வியும் வேலைவாய்ப்பும் எங்கே?’’ என  இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.செல்வா ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.  இரண்டாம் நாள் (9 ஆம் தேதி) மாநாட்டில்  செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை  அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர்  நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர்  நாகை மாலி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் கு.சண்முகசுந்தரம், உடுமலை நகர் மன்றத் தலைவர் மு.மத்தீன், தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆ.செல்வம் ஆகியோர் சிறப்புரை யாற்றுகின்றனர்.  மாலையில், உடுமலை நகராட்சி அலுவ லகம் முன்பு இருந்து சாலைப்பணியாளர் கள் குடும்பத்துடன் பேரணி துவங்கி, பழைய  பேருந்து நிலையம் அருகில் மாநில தலைவர்  மா.பாலசுப்பிரமணியன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதில் மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சோ. பாலகிருஷ்ணன் வரவேற்பு ரைக்கு பின், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை  பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலத்  தலைவர் எஸ்.கண்ணன், நெடுச்சாலைத் துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் அ.ரங்கசாமி பொது செயலாளர் ஆ. அம்சராஜ் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

அவிநாசியில் வாலிபர்  கழுத்து அறுக்கப்பட்டு கொலை

அவிநாசி, செப்.7 - அவிநாசி அருகே  வாலிபர்  கத்தியால் கழுத்து அறுத்து  கொலை செய்யப்பட்டார். அவிநாசி ராயர்கோயில் காலனி பகுதியில் வசித்து வருப வர் தென்காசியைச் சேர்ந்த லட்சுமணன் (35). இவரது மனைவி  கங்கா. இவர்களது மகன் அருண்குமார் (16), மகள் ஜோதி.  திருச்சி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ் (32).  நண்பர்களான யுவராஜ், லட்சுமணன் இருவரும் குடிநீர் கேன்  விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மேலும் லட்சும ணன் குடியிருக்கும் வீட்டிற்கு அருகிலேயே, வள்ளியம் மாள் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் கடந்த சில  நாட்களாக தனியாக யுவராஜ் வசித்து வந்துள்ளார். இந்நிலை யில், வாடகை வீட்டில் வசித்து வந்த யுவராஜ், வியாழக் கிழமை காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால்  வீட்டின் உரிமையாளர் வள்ளிம்மாள் வந்து பார்த்திருக்கி றார். அப்போது கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்  யுவராஜ் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ  இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார் யுவராஜின் உடலைக்  கைப்பற்றி, இவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்,  கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

9.31 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, செப்.7 - அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில்  ரூ.9.31 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்துக்கு 463 மூட்டை கள் கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்.சி.எச்., ரக பருத்தி  குவிண்டால் ரூ.6,000 முதல் ரூ. 7,355 வரையிலும், மட்ட ரகம்  (கொட்டு ரகம்) பருத்தி குவிண்டால் ரூ. 2,000 முதல் ரூ.3,500   வரையிலும் ஏலம் போனது.  மொத்தம் ரூ.9 லட்சத்து 31  ஆயிரத்துக்கு ஏலம் போனது.

காலாவதி உணவு: உணவு பாதுகாப்பு அலுவலர் அறிவுரை

திருப்பூர், செப். 7 - காலாவதி உணவுப்  பொருட்கள் கண்டறியப்பட் டால் புகார் தெரிவிக்க வேண் டும் என்று மாவட்ட உணவுப்  பாதுகாப்பு அலுவலர் வலி யுறுத்தினார். திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு  நலப்பணித் திட்டம் அலகு-2  மற்றும் தமிழ்நாடு உணவுத் துறை இணைந்து தேசிய  ஊட்டச்சத்து வாரத்தின்  நிறைவு விழா கருத்தரங்கு  வியாழனன்று நடைபெற் றது. உணவு பாதுகாப்பு அலு வலர் தங்கவேல் பேசுகை யில், பொருட்களை வாங் கும் போது உணவு காலாவதி  தேதி போன்ற குறிப்புகளை கவனித்து வாங்க வேண் டும். கலப்படம், தரம் குறைந் திருந்தால் 94440 42322 என்ற  எண்ணிற்கு தகவல் தர மாண வர்கள் முன் வர வேண்டும் என்றார்.

சாலை விபத்தில் 20 பேர் காயம்

சேலம், செப்.7- வாழப்பாடி அருகே வியாழனன்று தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வியாழனன்று காலை சேலம் - சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் வாழப்பாடி வழியாக சென்று கொண்டி ருந்தது. வாழப்பாடியை அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, திடீரென சாலையில் குறுக்கிட்ட லாரி,  பேருந்து மீது பலமாக மோதியது. இவ்விபத்தில், பேருந்து  ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேர்  லேசான காயமுற்றனர். இதையடுத்து படுகாயமடைந்தவர் களை மீட்ட அப்பகுதி மக்கள் மற்றும் போலீசார், அவசர சிகிச்சை வாகனத்தில், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்தால் சேலம் - சென்னை தேசிய  நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து மற்றும் ஏத்தாப்பூர் போலீசார், விபத்தில் சிக்கிய  வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்த னர். இவ்விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சேலம், செப்.7- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதி களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக 2 ஆயிரத்து  900 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் 1030 நபர்கள் நிரந்தர பணியாளராகவும், மீதமுள்ள  அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்ற னர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். நீண்ட காலமாக பணியாற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியா ளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள், தமிழ்நாடு அரசை கண்டித்தும், மாநகராட்சி நிர்வா கத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.