திருப்பூர், ஜன.17- திருப்பூர் மாவட்டம், சமளாபுரம் பேரூராட்சி, குளக்கரை யில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுற்றுலா பொங்கல் விழாவை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று துவக்கி வைத்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சாம ளாபுரம் குளக்கரையை மையப்படுத்தி சாமளாபுரம் குளக்க ரையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் விழா திட்டமிட்டு நடை பெற்றது. சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம், திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம், சாமளாபுரம் குளம் பாதுகாப்பு அறக்கட் டளை, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறையுடன் ஒருங்கி ணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பெருஞ்சலங்கையாட்டம், தப்பாட்டம் பறையாட்டம், சிலம்பாட்டம், ஜிக்காட்டம், கரகாட்டம் மற்றும் வள்ளி கும்மி ஆட்டம் ஆகியவற்றை பார்வையிட்டு, உரி அடிக்கும் போட்டியில் பங்கேற்று உரி அடித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகு மார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச் சாமி, செயல் அலுவலர் நந்தகுமார் , பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், முன்னாள் ராணுவ சங்க நிர்வாகி சக்தி, திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சங்கத்தலைவர் குளோபல் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.