districts

சுமைப்பணி தொழிலாளர்களின் 6 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு

ஈரோடு, ஆக.1- ஈரோட்டில் சுமைப்பணி தொழிலாளர்க ளின் 6 ஆண்டு கால போராட்டம் முடிவிற்கு வந்தது. புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அம லுக்கு வந்தது. ஈரோடு மாநகரைச் சுற்றியுள்ள சரக்கு  லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்கள், ரெகுலர் லாரி சர்வீஸ் போன்ற நிறுவனங்க ளில் சுமார் 7000 தொழிலாளர்கள் சுமைப் பணியை செய்து வருகின்றனர். ஈரோடு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் மற்றும் இத் தொழிலாளர்கள் சார்ந்துள்ள மத்திய தொழிற் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு உள்ளிட்ட ஒப்பந்தம் ஏற்படுத் தப்படும். இதன் மூலம் கூலி உயர்வு மற்றும் சலுகைகளை இத்தொழிலாளர்கள் பெற்று  வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் காலாவதியான நிலையில், புதிய உடன்பாட்டிற்கு கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசியேசன் மறுத்து வந்தது.  இவ்வாறு பாரம்பரியமிக்க தொழிலுறவு சீர்கெட்ட நிலையில், சிஐடியு உள்ளிட்ட மத் திய தொழிற்சங்கங்கள் பல முறையீடுகளை செய்தது. போராட்டங்களை நடத்தியது. வரு வாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட மாவட்ட நிர் வாகம் சுமைப்பணி தொழிலாளர்களின் வாழ் வாதார கோரிக்கைகக்கு தீர்வு காண வில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 13 ஆம்  தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத் தத்திற்கு சிஐடியு, எல்பிஎப், ஏடிபி உள்ளிட்ட 8 மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத் தது. அன்று முதல் 9 நாட்களாக தர்ணாவும் நடத்தப்பட்டது. இதனால் நாளொன்று சுமார்  100 கோடி வீதம் சரக்குகள் தேக்கமடைந் தன.  இதனைத்தொடர்ந்து வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்து சாமி இருதரப்பினரையும் பேச்சுவார்த் தைக்கு அழைத்தார். கூலி உயர்வு தொடர் பாக ஒரு குழு அமைத்து உடன்பாடு எட்டப் படும் என உறுதியளித்தார். அதன்படி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு, பேச்சு வார்த்தைகள் தொடங்கின. இறுதியில் 26 விழுக்காடு கூலி உயர்வு வழங்க ஒப்புக் கொள் ளப்பட்டது. அத்துடன் நாள்தோறும் 3 முறை  தேநீர் வழங்கப்படும். இரவு உணவுப்படி ரூ.100 வழங்குவது என்றும் உடன்பாடு ஏற்பட் டது. இது கூட்ஸ் டிரான்ஸ்போர்ட் அசோசி யேசனோடு ஏற்பட்ட ஒப்பந்தமாகும். அதே போல தமிழ்நாட்டிற்குள் இயங்கும் ரெகுலர் லாரி சர்வீசிஸ் நிறுவனங்களில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு 21 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கவும் உடன்பாடு ஏற் பட்டது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந் துள்ள ஒப்பந்தம், 2026 ஜூலை இறுதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.