districts

img

ஆட்சியரகம் முன்பு சிஐடியு தலைமையில் காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஆக.11 – நகராட்சிகளில் தூய்மைப் பணி அவுட் சோர்சிங் விடப்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த  அடிப்படையில் அதில் வேலை செய்யும் பணி யாளர்கள், அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை குறைக்காமல் வழங்க வலியு றுத்தி சிஐடியு தலைமையில் வேலை நிறுத் தம், காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங் கியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நக ராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய நகர்ப்புற  உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை பணியை மாநில அரசு அயல்பணியாக (அவுட்  சோர்சிங்) தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரி வித்த நிலையிலும் கடந்த ஜூன் மாதம் முதல்  அவுட் சோர்சிங் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலை செய்வோரை, அவுட் சோர்சிங் எடுத் திருக்கும் ஒப்பந்ததாரர்களின் கீழ் வேலை  செய்யக்கூடியவர்களாக மாற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி  மற்றும் ஆறு நகராட்சிகளிலும் இந்த அவுட் சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் அவுட்சோர்சிங் முறையில்  வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒப் பந்த அடிப்படையில் அரசு குறைந்தபட்ச தினக்கூலி நிர்ணயம் செய்துள்ளது. ஆனால்  ஒப்பந்ததாரர்கள் அரசு நிர்ணயித்த குறைந் தபட்ச தினக்கூலியையும் குறைத்து வழங்கு கின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடும்  அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில்  திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட் சித் துறை ஊழியர் சங்கம் தலைமையில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் தொழிலாளர்கள் ஏற்கெனவே ஆங்காங்கே கோரிக்கை மனுக் கொடுத்து, போராட்டத் தைத் தொடங்கினர்.

இரண்டு மாதங்களுக்கு மேலாக எவ்வித  தீர்வும் இல்லாமல் இப்பிரச்சனை நீடிக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை திருப்பூர் மாவட் டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி, பல்லடம்,  தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில் ஆகிய நகராட்சிகளைச் சேர்ந்த தொழிலாளர் கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். தங்கள் வேலையை நிறுத்தி விட்டு, திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு முன்பாக அனைவரும் ஒன்று சேர்ந்துள்ள னர். கோரிக்கை நிறைவேறும் வரை காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று  முடிவு செய்து காலை முதல் போராட்டத் தைத் தொடர்ந்து வருகின்றனர். சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், மாவட்டத் தலைவர் பி.பழனி சாமி, திருமுருகன்பூண்டி நகர்மன்ற கவுன்சி லர் சுப்பிரமணியம், பல்லடம் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், பொன்னுசாமி உள்ளிட்டோர் இப்போராட்டத் தில் தொழிலாளர்களுடன் இருந்தனர். இப்போராட்டம் தொடர்ந்து வந்த நிலை யில், நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அதி காரிகள் நேரில் இங்கு வந்து சங்க நிர்வாகி களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்  துறையினரும் அதிகாரிகளைத் தொடர்பு  கொண்டு பேசினர். எனினும் திட்டவட்டமான  தீர்வு எட்டப்படாத நிலையில், போராட்டம் நீடித் தது. இதையடுத்து மாலை 6 மணியளவில் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்று கையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், சிஐடியு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், தற் போது தொழிலாளர்கள் பெற்று வரும் தினசரி சம்பளம் ரூ.380யை, ரூ.442 ஆக உயர்த்தி வழங்க ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப் படும். அரசாணைப்படி ஊதியம் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும், என உறுதியளித்தார். இதனையேற்று காத்திருப்பு போராட்டம் இரவு 9 மணியளவில் நிறைவுற்றது. மேலும், உறுதியளித்தபடி ஊதிய உயர்வு வழங்கா விட்டால், ஆக.18 ஆம் தேதியன்று மிகப் பெரும் போராட்டம் நடத்த உள்ளதாக கே. ரங்கராஜ் தெரிவித்தார்.