districts

img

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

தருமபுரி, ஆக.18- தருமபுரி அருகே உள்ள தொப்பூர் கணவாயில் அடுத்த டுத்து 4 வாகனங்கள் மோதி விபத்தால், சேலம்-பெங்களூரு  நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது  தருமபுரி வழியாக சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி  தொப்பூர் கணவாய் பகுதியில் இரட்டை பாலம் அருகே வேக மாக சென்றுக் கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்று  கொண்டிருந்த 3 சிறிய ரக சரக்கு வாகனங்கள் மீது கண் டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் முன்னாள்  சென்ற 3 வாகனங்களும் அடுத்தடுத்து சாலையில் கவிழ்ந்தது.  மேலும் விபத்து ஏற்படுத்திய கண்டெய்னர் லாரியும் சாலை யில் குப்புற கவிழ்ந்தது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்  கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர்.   இந்த விபத்தின் காரணமாக சேலம் – பெங்களூரு தேசிய  நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொப்பூர் கணவாயில் இருந்து 2 புறமும் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல்  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையறிந்த சுங்கச் சாவடி ஊழியர்கள் மற்றும் தொப்பூர் போலீசார் சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங் களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய் தனர்.