districts

img

நூற்றாண்டை தொடும் தூரிப்பாலம் நினைவு சின்னமாக பாதுகாக்க கோரிக்கை

தூண்கள் இல்லாமல் அந்த ரத்தில் தொங்கும் இரும்பிலான தூரிப்பாலம் – நூற்றாண்டை தொடும் இப்பொறியியல் அதிச யத்தை நினைவு சின்னமாக மாற்றி  பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.  கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் கல்லார் என்னு மிடத்தில் கோவை மற்றும் நீலகிரி  மாவட்டங்களை இணைக்கும் பாலமாக கடந்த 1925 ஆம் ஆண்டு  கட்டப்பட்டது தூரி பாலம். மலை யடிவார பகுதியில் கல்லாறு என்னும் காட்டாற்றை வாகனங் கள் கடந்து செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த தொங்கு பாலம் 65 மீட்டர் நீளமும் 5.5 மீட்டர் அக லமும் கொண்டதாகும். 10 டன்  எடையை தாங்கும் திறன் கொண்ட தாக இப்பாலம் இருந்தாலும் ஒரே  நேரத்தில் மூன்று லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றால் 30 டன் அளவுக்கு எடையை தாங்கும். இப்பாலத்தின் அடியில் எவ்வித தூண்களையும் அமைக்காமல் ஒட்டுமொத்த பாலமும் அந்த ரத்தில் தொங்கும் வகையில் வியக்க வைக்கும் தொழில் நுட்பத் தில் கட்டப்பட்டதாகும். இப்பாலத்தின் வழியே செல் லும் வாகனங்களின் எடையை கீழ்  நோக்கி அழுத்தாமல் மேல் நோக்கி ஒன்றோடு ஒன்று இணைக் கப்பட்ட இருப்பு பாலங்கள் எடை யின் பாரத்தை மேல் நோக்கி  அழுத்தி தாங்கும் வகையில் இப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பாலம் பழுது படவில்லை என் றாலும், இதன் வயது 98 ஆண்டு கள் ஆனதாலும், பாலத்தின் மீது  எதிரெதிரே பேருந்து போன்ற இரு கனரக வாகனங்கள் கடக்க இய லாது என்பதால், கடந்த ஐந்தாண் டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ் சாலைத்துறை இப்பாலத்தின் அருகே புதிய உயர்மட்ட பாலம்  கட்டியது. இதனால், புதிய சிமெண்ட் பாலத்தில் கடந்த ஐந் தாண்டுகளாக வாகனங்கள் செல்வதால் அதுவரை பயன் பாட்டில் இருந்த தூரிப்பாலம் பரா மரிப்பிலாமல் விடப்பட்டுள்ளது. நூற்றாண்டை தொடவுள்ள இப்பாலம் கடும் மழை மற்றும் பனி  பொழிவு அதிகமுள்ள இடத்தில்  இருந்தாலும் இதுவரை இதன்  இரும்பு பாலங்கள் துருப் பிடிக்காமலும் வளையாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தன் சிறப்பையும் சேவையினையும், மறைக்கும் வகையில் முள் செடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் பரி தாபமாக தற்போது காட்சியளிக் கின்றது. ஓடந்துறை கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பல்வேறு பொறி யியல் சிறப்புகளை கொண்ட இந்த  தொங்கும் தூரிப்பாலத்தை நினைவு சின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்பது  இப்பகுதி மக்களின் கோரிக்கை யாக உள்ளது.  இதுகுறித்து ஓடந்துறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, “இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ஊராட்சி  சார்பில் மனு கொடுக்கப்பட் டுள்ளது, மேலும் ஒரு தனியார் நிறுவனம் (ராயல் என்பீல்ட்) எங்களது வேண்டுகோளை ஏற்று  இப்பாலத்தை பராமரிக்க முன் வந் துள்ளது” என்றனர்.