கொல்கத்தாவில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபவட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஞாயிறன்று நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதில் சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன்குமார், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஜி.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.