districts

img

அவிநாசி: ஆபத்தான கட்டிடத்தில் இயங்கும் தபால் நிலையம்

திருப்பூர், நவ.20- அவிநாசி அடுத்த பெரியாயிபாளையத்தில் உள்ள தபால் நிலைய கட்டிடத்தை புதுப்பிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேருராட்சி அருகே உள்ள  பெரியாயிபாளையத்தில் தபால் நிலையம் செயல்படுகிறது. இங்கு சேமிப்பு கணக்கு, ஆர்.டி, பகுதி கால சேமிப்பு (டேர்ம் டெபாசிட்), செல்வ மகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்சு, தபால் சேவை, விரைவு தபால், பார்சல் உள்பட பல்வேறு  வகையான சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும், சுற்று வட்டார பகுதியில் வங்கி வசதியும் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் இந்த தபால் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த தபால் நிலைய கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், தற்போது வலுவிழந்து காணப்படு கிறது. இந்நிலையில், தபால் நிலையத்தின் மேற்கூரையின் ஓடுகள் இன்றி, சாய்ந்து நிற்பதால் இங்கு வரும் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. இதனால் உள்ளே இருப்பவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள் ளது.  எனவே, தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற் கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.