கோவை, ஜன.8- கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பட்டா கேட்டு மனு அளிக்க வந்த நபர், திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்ப வம் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் வாரந்தோறும் திங்கட்கி ழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடை பெற்று வருகிறது. இம்முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் மக்கள், தங்களது கோரிக்கைகளை மனுக்க ளாக வழங்குவது வழக்கம். இந்நிலை யில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்க்கு மனு அளிக்க வந்த கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவர், ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே திடீரென பெட் ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை கவனித்த போலீசார் தீக்குளிக்க முயன்ற சண்முகசுந்த ரத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், அவரை அழைத்துச் சென்று விசா ரணை நடத்தினர். அதில், கடந்த இரண்டு வருடமாக தன்னுடைய நிலத்திற்கு பட்டா, சிட்டா கேட்டு ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்ததாகவும், எந்தவித நடவ டிக்கை எடுக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணை யில் தெரியவந்தது.