கோவை, பிப்.16- கோவையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் ரயில்வே பாதுகாப் புப் படையினரின் (RPF) துரிதச் செயலால் உயிர் பிழைத்தார். கொல்லம் - திருப்பதி ரயில், ஞாயி றன்று திருப்பூர் ரயில் நிலையத்தைக் கடக் கும் போது, பயணி ஒருவர் தவறி விழுந்ததாக ஆர்பிஎப் -க்கு தகவல் கிடைத்தது. விபத்து நடந்த சரியான இடம் தெரியாத நிலையில், டிக்கெட் பரிசோதகர் சேலம் வணிகக் கட்டுப் பாட்டுக்குத் தகவல் தெரிவித்தார். பாதிக்கப் பட்டவரின் நண்பர் அதே பெட்டியில் திருப் பதிக்குச் சென்று கொண்டு இருந்ததால், அவ ரது உதவியுடன் கைபேசி எண்ணைக் கண்ட றிந்து, இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சி யில் போலீசார் இறங்கினர். கைபேசியின் இருப்பிடம் கோவை ரயில் நிலையத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டது. உடனடியாக, கோவை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீலிக்கோணம் பாளையம் அருகே ரயில் தண்டவாளப் புதர் பகுதியில் தேடிய போது, ஒருவர் படுகாயங்களுடன் கைபேசியுடன் இருப்பதைக் கண்டனர். காய மடைந்தவர் கேரளாவைச் சேர்ந்த ராமன் கே (38) என்பதும், அவர் தனது குடும்பத்தின ருடன் ராஜேஷ் என்பவரின் பேரனுக்கு மொட்டை அடிக்கும் விழாவிற்காகத் திருப் பதிக்குச் சென்று கொண்டு இருந்தார். ரயில் கதவுகள் வேகமாகத் திறக்கப்பட்டதால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாக கூறப் படுகிறது. ராமனின் தலையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததோடு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந் தன. சம்பவ இடத்திலேயே 108 ஆம்பு லன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட் டார். ஸ்ரீராமனின் உடல்நிலை தற்போது ஆபத் தில் இல்லை என்றும், இருப்பினும் தலை யில் ஏற்பட்ட காயங்கள் கடுமையானவை யாக உள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வரு வதாக மருத்துவர்களும் தெரிவித்து உள்ள னர்.