கோபி, ஜன.5- ஈரோடு மாவட்டம், நம்பியூரில் ரூ 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வணிக வளாகத்தை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் எதிரே புதிய வாரச்சந்தைக்கான செட் மற்றும் வணிக வளாகம் கட்டும்பணி கடந்த இரண்டு வருடங்க ளாக நடைபெற்று வந்தது. ரூ 5.10 கோடி மதிப்பீட்டில் கட்டப் பட்டு வந்த வணிக வளாகம் திறப்பு விழா வெள்ளியன்று நடை பெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலம் புதிய வார சந்தையை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். இந்நிகழ்வில், நம்பியூர் பேரூராட்சி மன்ற தலைவர் மெடிக்கல் செந்தில்குமார், செயல் அலுவலர் எஸ்.வி சரவணன் உள்பட திரளனோர் கலந்து கொண்டனர்.