உதகை, ஆக.18- உதகை அருகே ஒய்யாரமாக சாலையில் நடந்து வந்த ஒற்றை புலியால் வாகன ஓட்டி கள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புலி, கரடி, சிறுத்தை, காட்டெ ருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில வருடங்களாகுடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருவதாலும் வனப்பகுதிகள் குறைந்து வருவதாலும் இந்த வன விலங்குகள் காட்டில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வருகின்றன. இதனால் அவ்வப் போது மனித -வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்தநிலையில் உதகையில் இருந்து பைகாரா செல்லும் சாலையில் அமைந் துள்ள கிளன்மார்கன் பகுதியில் புலி ஒன்று சாலையில் பட்டப்பகலில் ஒய்யாரமாக நடந்து வந்தது. இதன் பின்னர் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்தோடு வீடியோ பதிவு செய்த னர். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறு கையில், கிளன்மார்கன் பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் புலிகள் மற்றும் சிறுத்தை கள் அதிக அளவில் உள்ளன. ஆனால் இவை இதுவரை சாலை பகுதிக்கு வந்தது கிடையாது. ஆனால் தற்போது சாலையில் புலி நடமாட்டம் தென்பட்டுள்ளதாக வீடியோ வெளிவந்துள்ளது. எனவே அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லவேண்டும். புலி களை பார்த்தால் தொந்தரவு செய்யக் கூடாது. மேலும் புகைப்படம் மற்றும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.