நாயை வேட்டையாடிய சிறுத்தை
கோவை, செப்.30. தொண்டாமுத்தூர் அருகே வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாடி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை அடுத்த வண் டிக்காரனூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வனவிலங்குக ளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்பகுதி யைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கடித்து இழுத்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி, அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு போன்ற வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடி வருகின்றன. வனத்துறை யினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தாலும், சிறுத்தையை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சிறுத்தையின் தொடர்ச்சியான தாக்குதலால் அப்பகுதி மக்கள் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதான வர்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், விவசாயிகள் தங்கள் வயல்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வனத்துறையி னர் சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ற னர். மேலும், பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மனைபட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்
தருமபுரி, செப்.30- பட்டியலின மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், பென்னாகரம் அருகே குடி யேறும் போராட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் வட்டம், மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சி, கடமடை வருவாய் கிரா மத்தில் உள்ள சர்வே எண்:40/2பி-யில் 9.88 ஏக்கர் நிலத்தில் மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, 2001 ஆம் ஆண்டிலி ருந்து 11 கிராமங்களில் வசிக்கும் பட்டியலின மக்கள் போராடி வருகிறார்கள். அம்மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தில், பட்டா வழங்கக்கோரி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியபிறகும், அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர். இந்த போக்கை கண்டித்தும், உடனடியாக மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தோழர் பி.சீனி வாசராவ் நினைவு தினமான திங்க ளன்று, கடமடை 5 ஆவது மைல்கல் கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைமையில் குடி யேறும் போராட்டம் நடைபெற் றது. இதனையடுத்து போராட்டக் களத்திற்கு நேரில் வந்த பென்னா கரம் வட்டாட்சியர் ஆறுமுகம், வரு வாய் ஆய்வாளர் விஜயசாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் சக்தி வேல் ரத்தினவேல், பென்னாகரம் துணை காவல் கண்கணிப்பாளர் ராஜசுந்தர் ஆகியோர் அமைப்பின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மஞ்சநாய்க் கனஅள்ளி, கலப்பம்பாடி ஊராட் சிக்குபட்ட 11 கிராமங்களில் வசிக் கும் பட்டியலின மக்களுக்கு ஏற்க னவே ஒதுக்கப்பட்ட 9.88 ஏக்கர் நிலத் தில், ஒரு மாதத்திற்குள் நில அளவை செய்து மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த னர். இதனையடுத்து போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத் திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில சிறப்புத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.ஜெயராமன், செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் கே.கோவிந்த சாமி, மாநிலக்குழு உறுப்பினர் டி. மாதையன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் ஏ.குமார், மாநிலக்குழு உறுப் பினர் ஆர்.சிசுபாலன், மூத்த தலை வர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன் எம்.முத்து, வி.ரவி, சோ.அருச்சுணன், எஸ்.கிரைஸாமேரி, ஆர்.மல்லிகா, ஒன்றியச் செயலாளர் ஜி.சக்தி வேல், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜீவானந்தம், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டத் தலைவர் மா.தேவன், செயலாளர் ஜே.பி.சுப்பிரமணி, பொருளாளர் எஸ்.வெள்ளிங்கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்: வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
சேலம், செப்.30– காவல் நிலையத்தில் வழக்கறிஞர் அவமதிப்பு நடைபெறுவதை கண்டித்து சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன் றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக் கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், மேச்சேரி காவல் நிலையத்திற்கு வழக்கு தொடர்பாக பகத்சிங் என்ற வழக்கறிஞர் சென்றுள் ளார். அப்போது அங்கு பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளர் சுதாகர் என்ப வர், வழக்கறிஞர் பகத்சிங்கை ஒருமை யில் பேசி இழிவுபடுத்திள்ளார். மேலும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட காவலர்கள் பகத்சிங்கின் செல்போனை வாங்கிக் கொண்டு 3 மணி நேரம் சிறை பிடித்துள் ளனர். இந்நிலையில், வழக்கறிஞர்கள் தொடர்ந்து காவல் நிலையத்தில் அவம திப்பு செய்யப்படுவதை கண்டித்தும், வழக்கறிஞர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என வலி யுறுத்தி, திங்களன்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவே கானந்தன் தலைமையில் இப்போராட் டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில், நீதிமன்ற பணி களை புறக்கணித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர்.
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
சேலம், செப்.30- மார்க்சிஸ்ட் கட்சியின், அரியாக்கவுண்டம்பட்டி பகுதி கிளைகளுக்கான செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாந கரம், அரியாக்கவுண்டம்பட்டி பகுதிக்குட்பட்ட கிளைகளில் மாநாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, அரியாக் கவுண்டம்பட்டி ஏ.கிளைச் செயலாளராக ஏ.ஜெயவேல், பி.கிளைச் செயலாளராக வி.பிரகாஷ், சி.கிளைச் செயலாள ராக பி.சக்தி, காளியம்மன் நகர் கிளைச் செயலாளராக வி.முருகன், லட்சுமி நகர் கிளைச் செயலாளராக எம்.மூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கட்சியின் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கஞ்சா விற்பனை: 4 பேர் கைது
உதகை, செப்.30- ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து குன்னூர் பகுதியில் கஞ்சா விற்ற 4 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். கேரளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரி யில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக காவல் துறையின ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் சதீஷ், உதவி ஆய்வாளர் குணா ஆகியோர் தலைமையி லான போலீசார், குன்னூர் லாரி ஸ்டாண்ட் பகுதியில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வெலிங்டன் பகுதியை சேர்ந்த அஜய் (23), இமானுவேல் பெலிக்ஸ் (28), அரவிந்த் (24), ஜோஸ்வா (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து ஒரு 1.400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து குன்னூர் பகுதியில் கஞ்சா விற்ப னையில் ஈடுபட்டதும், குறிப்பாக மாணவர்களுக்கு அதிக ளவில் கஞ்சா விநியோகித்து வந்ததும் தெரிய வந்தது. தற்போது கைது செய்யப்பட்ட இமானுவேல் பெலிக்ஸ் 3 மாதத்திற்கு முன்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி, அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டு, விடுதலையாகி வெளியில் வந்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு; சாலை மறியல்
கோபி, செப்.30- பிரவசத்திற்காக அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயி ரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபா ளையம் அருகே உள்ள சுண்டப்பா ளையத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 7 வயதில் பிரதிக்ஷா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த மைதிலி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் முறையாக பரிசோ தனை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மக்களை தேடி மருத்துவக்குழுவினர் சுண்டப்பாளை யத்தில் முகாமிட்டுள்ளனர். அப்போது அங்கு பரிசோதனை மேற்கொண்ட போது, மைதிலிக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததாக தெரிவித்து, உடனடியாக கோபிசெட்டி பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண் டும் என மருத்துவக்குழுவினர் வலியு றுத்தியுள்ளனர். இதையடுத்து மைதி லியை, அவரது கணவர் மற்றும் மைதிலியின் தாயார் கடந்த செப்.20 ஆம் தேதி வியாழனன்று கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்ந்துள்ளார். அப்போது மைதி லிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் உடனடி யாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி, மைதிலிக்கு சிசேரியன் செய்ததில் ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், சிகிச்சைசெய்து முடித்த பின்னர் மைதிலிக்கு ரத்த போக்கு அதிகளவில் இருந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்காமல் மருத்துவமனை நிர்வாகம், ரத்த போக்கை கட்டுப்படுத்த கோவை மருத் துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மைதிலி கடந்த செப்.28 ஆம் தேதியன்று உயிரிழந் தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவி னர்கள், கோபி அரசு மருத்துவமனை யில் தவறான சிகிச்சை மேற்கொண்ட தால்தான் மைதிலி உயிரிழந்துள்ளார் எனக்கூறி கோபி – குன்னத்தூர் சாலை யில், வேட்டைகாரன்கோவில் பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில், மறியல் கைவி டப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் மைதிலியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கோள் ளப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மைதிலியின் உயிரி ழப்பிற்கு காரணமானவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரேதத்தை மயானத்தில் வைத்துவிட்டு, 100க்கும் மேற்பட்டோர் ஞாயிறன்று கோபி - குன்னத்தூர் சாலையில் அமர்ந்து மீண்டும் மறிய லில் ஈடுபட்டனர். இதன்பின் திங்களன்று மைதிலியின் உறவினர்கள் மற்றும் அரசியல் அமைப்பினர் என 500க்கும் மேற்பட்டோர், வேட்டைகாரன்கோவி லிலிருந்து கோபி கோட்டாச்சியர் அலு வலகம் வரை பேரணியாக சென்று, சார் ஆட்சியர் சிவானந்தமிடம் மனு அளித்த னர். அம்மனுவை பெற்று கொண்ட சார் ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மைதிலியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
திருப்பூர், செப்.30- மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப் படை வசதிகள் செய்துதர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு ஒன்றியக் குழு கிளை மாநாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய கிளை செயலாளர்கள்: ஜெய் நகர் சி.சுப்பிரமணியன், வள்ளியம்மை நகர் டி.துரை சாமி, ஆர்.வி.ஈ.நகர் பி.ரமேஷ், நல்லூர் திருப்பதி, ராக்கியாபா ளையம் நிர்மல் குமார், ராக்கியபாளையம் மாதர் பாரதி, விஜ யாபுரம் ராமசாமி, மங்கலம் குப்புசாமி, பெரியாண்டிபாளை யம் பரிமளம், முருகம்பாளையம் பி.கருப்புசாமி, முருகம் பாளையம் மாதர் ஈ.அங்குலட்சுமி, குளத்தூர் கருப்புசாமி, திருக்குமரன் நகர் சேகர், கல்லாங்காடு பழனிசாமி, இடுவம் பாளையம் ஏசு, அண்ணாநகர் ஜெய்பிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கிளை மாநாடுகளில் மாநிலக் குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்டக் செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, டி.ஜெய் பால், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கணேசன், பி.லட்சுமி, ஷகிளா மற்றும் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி.சுப்பிரமணியன் எஸ்.சண்முகம் ஈ.அங்குலட்சுமி கே.வேலுசாமி எஸ்.குணசேகர் எம்.மகேஷ் எஸ்.பொன்ராம் எஸ்.ரவிச்சந்திரன் பி.கருப்புசாமி ஆர்.செல்வகுமார் எஸ்.ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிபிஎம் வடக்கு ஒன்றிய கிளை மாநாடுகள்
திருப்பூர், செப்.30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு கிளை மாநாடுகள் நடைபெற்றது. இதில், புதிய கிளைச் செயலாளகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள் கிளைச் செயலாளர் கள்: வள்ளிபுரம் விகே. சாமிநாதன், பொங்குப்பாளையம் ஏ. குமாரவடிவேல், சேடர்பாளையம் எஸ்பி.கோபால், பாண்டி யன் நகர் ஏ.ராஜன், சக்தி நகர் சர்க்கரைசாமி, பிச்சம்பாளை யம் புதூர் பொன்னுச்சாமி, மன்னரை எம்.சுப்பிரமணியம், ஸ்ரீந கர் விஸ்வநாதன், வெங்கமேடு பி.காளிஸ்வரன், குமரன் காலனி எம்.ராஜாமணி, நெசவாளர் காலனி ஜி.மீனாட்சி, மாற் றுத்திறனாளி அரங்க கிளை பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களை மிரட்டும் நுண் நிதி நிறுவனங்கள்: நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்
உடுமலை, செப்.30 - உடுமலை ஒன்றியத்தில் கிராமப்புற மக்களை நுண் நிதி நிறுவனங்கள் எளிய முறையில் கடன் தருகிறோம் என ஆசையைத்தூண்டி புற்றீசல் போல புறப்பட்டு வந்து கடன் வலையில் சிக்க வைக்கின்றனர். மேலும், தவணை தவ றினால் கெட்டவார்த்தைகளால் கண்ட படி திட்டும் சம்பவங்கலும் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உடுமலையில் உஜ்ஜீவன் நிதி நிறுவனத்தில் தவணை முறையில் கடன் பெற்றவர்களை, தவணை தவறினால் இழிவுபடுத்தும் நிதி நிறுவன வசூல் ரௌடிகள் மீது கந்துவட்டி தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும். வீட்டில் தனி யாக இருக்கும் பெண்களை வீடு தேடி வந்து பலர் முன்னிலையில் மிரட்டி கேவ லமாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி ரௌடிகளை போல நடந்து கொள்கின்றனர். பெண்கள் வெளியூர் சென்றிருந்தால் அங்கும் தேடி வந்து உறவினர்கள் முன்னிலையில் பணத் தைக் கட்டுடி ரோசம் எல்லாம் வரக்கூ டாது என்று கேவலமாக பேசி கடுமை யான மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். கடன் தொல்லையால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் செய்திகள் அன்றா டம் வந்து கொண்டிருக்கும் நிலையில், உஜ்ஜீவன் போன்ற ஸ்மால் பேங் கிங் நிறுவனங்கள் மக்களை அச்சு றுத்துவதை அனுமதிக்கக்கூடாது. ரிசர் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறி ரௌடித்தனம் தொடரும்பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அடுத் தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என கூறப்பட்டுள்ளது.
தையல் தொழில் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை
திருப்பூர், செப். 30 - தையல் தொழில் மூலப்பொருட் களுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் கைவிட வேண்டும் என தையல் கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடை பெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு திருப்பூர் மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் வேல்முருகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தையல் தொழிலாளர்கள் ஆண், பெண் என இருபாலரும் கடை வைத்து சுய தொழில் செய்து வருகிறார்கள். ஏழை தையல் தொழிலாளர்களின் வாழ்வாதா ரம் பாதிக்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் தையல் தொழிலுக்கு தேவை யான மூலபொருட்களுக்கு வரி, மின் சார கட்டண உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பலவிதமான வரிகள் மற்றும் கடை வாடகை, பராமரிப்பு செலவுகள், வாழ்க் கைக்கு தேவையான இதர பொருட்க ளின் விலை உயர்வு காரணங்களால் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இத னால், தையல் தொழிலாளர்கள் தொழில் நடத்துவதற்கு வழியில்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி பொருளா தார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். எனவே தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். சுய தொழிலாக தையல் தொழில் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு மூலப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து வித மான வரிகளையும் கைவிட வேண்டும். புதிய எலக்ட்ரானிக் தையல் மிஷின்கள் வாங்குவதற்கும் மற்றும் தையல் தொழி லையும், தொழிலாளர்களையும் பாது காக்க வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் பள்ளி சீருடை களை பள்ளி நிர்வாகமே தைத்துக் கொடுப்பதை கைவிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஒய்.அன்பு, தையல் கலைஞர்கள் சங்க பொருளா ளர் தண்டபாணி, மாவட்டக்குழு உறுப் பினர் சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.
பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி போராட்டம்
ஈரோடு, செப்.30- பட்டியலின மக்களின் வீட்டு மனை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் இசைவு தெரிவித்ததால், காத்திருக் கும் போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்க லம் வட்டத்தில் அருந்ததிய மக்கள் 198 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். பட்டியலின மக் களை தொழில்முனைவோராக்கும் வகையில், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்ட 200 தொழிற்கூடங்களை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மனித உரிமைப் போராளி தோழர் பிஎஸ்.சீனிவாசராவ் நினைவு தினத் தன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருக் கும் போராட்டம் அறிவிக்கப்பட் டது. அதன்படி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங் கம் தலைமையில் நூற்றுக்கணக் கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் திரண்டனர். அப் போது போராட்டக்குழுவினரிடம் தாட்கோ மேலாளர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதில், சிப்காட் வளாகத்தில் பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்காகக் கட்டப்பட்டு பழுதடைந்த 200 குடோன்களை புதுப்பிப்பதற்கு தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 20 நாட்களில் அதன் பராமரிப்பு பணி களை துவங்குவதற்கான வாய்ப் புள்ளது. மேலும், தொழில் மையத் தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான 150 ஏக்கரில் 48 ஏக் கரை 3 தனியார் முதலாளிகளுக்கு கொடுத்தது சம்பந்தமாக, என்ன தொகைக்கு விற்பனை செய்யப்பட் டதோ, அன்றிலிருந்து இன்று வரை அதற்கு உண்டான வட்டியை கணக் கிட்டு தனியார் முதலாளிகள் தாட் கோவிற்கு செலுத்த வேண்டும். அந்தத்தொகையை தாட்கோ நிறுவ னம் பட்டியலின மக்களுடைய மேம் பாட்டுக்காக பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு மாத காலத்திற்குள் தொழில் கூடம் செயல்படுத்தப்படுவதற் கான வாய்ப்பு உள்ளதாக தாட்கோ மேலாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, கோபி சார் ஆட் சியர் அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சத்தியமங்கலம், தோப்பூர் காலனி யில் 198 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க, அரசு கோரிய கூடுதல் விபரங்களை அனுப் புவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரை வில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்தியூர் வட் டம், மைக்கேல்பாளையம் கிராம பட்டியலின மக்களுக்கு மயா னத்தை பயன்படுத்த தடையாக இருக்கும் தனிநபர் தடையை அகற்ற உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என எழுத்துப்பூர்வ மாக உறுதியளிக்கப்பட்டது. அதே போல கூலிவலசு, பொய்யேரிக் கடை மற்றும் ஈரோடு வட்டம், ஊனாத்திபுதூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்களின் கோரிக்கை நிறைவேற்றவும் நடவ டிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனடிப்ப டையில் காத்திருக்கும் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகு ராமன், தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, பொருளாளர் சி.ஜோதிமணி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரி முத்து, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.லலிதா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் பால சுப்பிரமணி, மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போச்சோவில் பள்ளி ஆசிரியை கைது
கோவை, செப்.30- மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த, தனியார் பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார். கோவை மாவட்டம், அன்னூரில் செயல்பட்டு வரும் தனி யார் பள்ளியில் சமூக அறிவியல் பாடம் நடத்தும் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சௌந்தர்யா. இவர் அப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து, அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதன்பின் அந்த புகார் மேட்டுப்பாளை யம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்த சௌந்தர்யாவை, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.