districts

ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தருமபுரி, ஜூன் 23- வார விடுமுறை தினமான ஞாயி றன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள்  ஒகேனக்கலில் குவிந்தனர். தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்  அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்று லாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர் விடுமுறை, வார விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடி வுற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு வரும் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை ஒகே னக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்று லாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இருந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வ ரத்து விநாடிக்கு 700 கன அடியாக குறை வாக வந்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி  மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் பரிசல் பயணம் தனி யார் ஒப்பந்தம் முடிந்த நிலையில், தமி ழக அரசே படகு சவாரி இயக்கி வருகி றது. இந்த படகு சவாரிப் பயணம் மேற் கொள்வதற்காக மாமரத்து கடவு பரி சல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணி கள் பாதுகாப்பு உடை அணிந்து தொம் பச்சி கல் வழியாக பெரிய பாணி, மணல்  மேடு வரை காவிரி ஆற்றின் பாறைக ளுக்கு இடையே உற்சாக பரிசல் பய ணம் மேற்கொண்டனர். ஒரு சில பட கோட்டிகள் பாதுகாப்பு உடை இல்லாம லேயே ஆபத்தான பயணத்தை மேற் கொண்டனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை யால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங் களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைப்பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட  பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித் தது. ஒகேனக்கல் வந்திருந்த சுற்று லாப் பயணிகள் தங்களது வாகனங் களை காவல் நிலையம், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ் நாடு ஓட்டல் வாகன நிற்கும் இடம், சத்தி ரம் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதி களில் நிறுத்தியிருந்தனர். அதிக கூட் டம் நெரிசலால் எந்தவித அசம்பாவித மும் ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.