districts

img

மக்கள் குடியிருப்புக்கு நடுவில் குப்பை கிடங்கு

திருப்பூர், ஜூலை 22- திருப்பூர் மும்மூர்த்தி நகர் அருகே  கருப்பராயன் நகர் பகுதியில் உள்ள  குப்பை கிடங்கால் நோய் தொற்று ஏற்ப டும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக் கள் கூறுகையில், இப்பகுதியில் 200க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு முன் னால் இப்பகுதியில் அமைந்திருந்த கல்குவாரியை மூட வலியுறுத்தி தொடர்ந்து மனு அளித்தோம். அப் போது திருப்பூர் மாநகராட்சி கழிவு களை கொண்டு வந்து கொட்டி பாறைக் குழியை மூடத் தொடங்கினர். குப்பைக ளுக்கு மேல் மண் கொட்டி சமன் செய்து  விடுவதாகவும் தெரிவித்தனர். ஆனால்  குப்பை கொட்ட தொடங்கி நான்கு ஆண் டுகள் ஆகிறது இன்னும் மண் கொட்டி  சீரமைக்கப்படவில்லை. இப்பகுதியை சுற்றி அரசு பள்ளி, தனியார் பள்ளி, மருத்துவமனை, கோவில்கள் குடியி ருப்புகள் அமைந்துள்ளன. மண் கொட்டி சமன் செய்து விளையாட்டு மைதானமாகவோ, பூங்காவாகவோ மாற்றுவதற்கு பதிலாக குப்பை கிடங் காக மாற்ற முயற்சிப்பதாக தெரிகிறது.  கொட்டப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலங்களில் குப்பைக் கூடம் கொசு உற்பத்தி மையமாக செயல் படுகிறது. இதனால் டெங்கு, மலேரியா  உட்பட பல்வேறு நோய் தொற்று ஏற்ப டும் அபாயம் உள்ளது. குப்பைக ளுக்கு மேல் மண் கொட்டி சமன் செய்ய  வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திற் கும், மாவட்ட ஆட்சியருக்கும் பலமுறை  மனு அளிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து மாவட்ட ஆட்சியர், மேயர் உட்பட பல அரசு அலுவலர்கள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். விரை வில் சீரமைக்கப்படும் என்றும் உத்தர வாதம் அளித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்து மூன்று மாதங்களுக்கு மேலாகிறது. இதையடுத்து சில பணி கள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பாதியிலேயே அப்பணிகளும் நின்று விட்டது. உரிய நடவடிக்கை மேற் கொண்டு குப்பைகளுக்கு மேல் மண் கொட்டி இதை ஒரு விளையாட்டு பூங்கா வாக மாற்ற வேண்டும் என்று கூறி னர்.