districts

img

மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

கோவை, ஏப். 4- கோவையில் மெத்தை மற்றும் ஷோபா  உற்பத்தி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பல லட்சம் மதிப்பிலான பொரூ ட்கள் தீயில் எரிந்து நாசமானது. கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர்  முகமது ஷேக் உசேன்.  இவருக்கு கோவைப் புதூர்  பகுதி அறிவொளி நகரில் மெத்தை தயாரிக்கும் ஆலை நடத்தி  வருகிறார். இங்கு  மெத்தை, சோபா உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து மொத்தமாகவும், சில்லரை யாகவும் விற்று வருகிறார்.  இந்நிலையில், செவ்வாயன்று காலை மின்சார கசிவு காரணமாக கடையில் தீ பிடித்து  பரவ துவங்கி உள்ளது. இதனை பார்த்த   பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் (பஞ்சு, நார்)  தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து குனிய முத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.