பள்ளிபாளையம், பிப்.4- பள்ளிபாளையம் அருகே பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற மாட்டு வண்டி சாலையில் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியிலிருந்து குமார பாளையம், ஈரோடு வழியாக திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, 15க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், ஒட்டமெத்தை பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத வித மாக சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் மாட்டு வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் மிரட்சி அடைந்த மாடுகள் சாலையில் அங்குமிங்கும் ஓடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவி யுடன், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள் இழுத்து வரப்பட்டு, கவிழ்ந்து கிடந்த மாட்டு வண்டி பத்திரமாக மீட்கப்பட்டது. இவ்விபத்து காரணமாக பள்ளிபாளையம் - சங்ககிரி சாலை யில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.