உதகை, மே 26- உணவுக் கழிவுகளை தேடி, ஊருக்குள் கரடி வந்து செல்வதால் பொதுமக்கள் அச்ச மடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன் னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்பட 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் அதிக அளவில் ஊருக்குள் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகு திகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூட லூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதி கரித்து உள்ளது. இந்நிலையில், வெள்ளியன்று காலை ஊட்டி அருகே உள்ள போர்த்தியாடா எல்லைக் கண்டி பகுதியில் கரடி ஒன்று சாலையில் உலா வந்துள்ளது. இதன் பின்னர் சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டியில் ஏறி, பிளாஸ் டிக் கவரில் இருந்த உணவு கழிவுகளை எடுத் துக்கொண்டு அங்கேயே தின்றுவிட்டு மீண் டும் வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்க ளில் பரப்பினார். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், நீலகிரி போன்ற வனப்பகுதி யில் உணவு கழிவுகளை வனப்பகுதியை ஒட்டி குப்பை தொட்டிகளில் கொட்டக்கூடாது. குப்பை தொட்டியில் உணவு கழிவுகளை கொட்டுவதால் கரடி உள்ளிட்ட வனவிலங்கு கள் ஊருக்குள் படையெடுத்து வருகின்றன. அந்த சமயங்களில் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படலாம். இதை வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பயன் பாட்டை குறைக்க வேண்டும், என்றனர்.