districts

img

வண்ண விளக்குளால் மிளிரும் பந்தையசாலை

கோவை, நவ.13- வண்ண விளக்குகள், மழலையர் பூங்கா, உடற்பயிற்சி கூடம், ஒளிரும் டவர் என கூடுதல் அழகுடன் கோவை பந்தையசாலை மிளிர்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்  கீழ் கோவை மாநகர் முழுவதையும் மேம் படுத்தும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. குளக்கரைகளில் நடைபாதை கள், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் உணவகங் கள் அமைக்கப்பட்டன. வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் படகு சவாரியும் துவங்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள தெருவிளக்குகள் எல்இடி விளங் குகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இத னால் கோவை மாநகர் புதுப்பொலிவு பெற்றது. மாநகரின் “ஹாட் ஸ்பாட்” என்று அழைக்கப்படும் பந்தையசாலை யும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற் காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், நிறைந்த பூங்கா, உடற்பயிற்சி கூடம்,  மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்ட நடைபாதைகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதுதவிர தாமஸ்பார்க் பகுதியில் பிரம்மாண்ட மீடியா டவர் அமைக்கப் பட்டு வருகிறது. இரவு நேரங்களில் வண்ண வண்ண விளக்குகளால் இந்த  டவர் மிளிர்வது, பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. கோவைக்கு இது ஒரு புது அடையாளத்தை ஏற்படுத்தும். அது மட்டுமில்லாமல் இந்த இடம் இனி செல்பி ஸ்பாட் ஆக இளைஞர்கள் மத்தி யில் வரவேற்கப்படும். அதேபோல் இந்த டவரை சுற்றி, தார் சாலைக்கு பதி லாக லண்டன் நகரை போல் கற்கள் பதிக்கப்பட்ட சாலைகள் உருவாக்கப் பட்டு வருவது இந்த இடத்திற்கு கூடு தல் அழகு சேர்க்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பியூட்டி புல் சிட்டியாக உருவெடுக்கிறது கோவை மாநகர் என் றால் அது மிகையல்ல என கோவை மாந கர மக்கள் தெரிவித்துள்ளனர்.