உதகை, ஜூலை 31- தென்மேற்கு பருவமழை காலத் தில் நீலகிரியில் 80 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை யும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும் பெய்யும். இதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழை பெய்யும். நீலகிரி மாவட்டத்தை பொருத்த வரை தென்மேற்கு பருவமழை தான் அதிக அளவில் பெய்யும். இதன்படி தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டர் மற்றும் வட கிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடைமழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், கடந்தாண்டு வழக்கத்தை விட கூடு தலாக மழை பதிவானது. இதற்கி டையே ஜூன் 1 ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தள்ளி போய் 8 ஆம் தேதியன்று தொடங்கியது. ஆனாலும் ஜூன் மாதத் தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. ஜூலை மாதத்தில் மட்டும் ஓரளவு மழை பெய்தது. குறிப் பாக கடந்த 10 நாட்களாக மழை தீவிர மடைந்துள்ளது. இந்த மழை காரண மாக பல இடங்களில் மின் கம்பங் களில் சரிந்தும் சாய்ந்து விழுகின்றன. இதனால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத்தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களை மாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், நீல கிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய 3 மின் கோட்டங்கள் உள்ளன. இதில் மாவட்டம் முழுவ தும் 39 மின் பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வீடு மற்றும் வணிக இணைப்புகள் என சுமார் 2 லட்சத்து 96 ஆயிரம் இணைப் புகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை தினசரி சுமார் 95 முதல் 100 மெகாவாட் மின்சாரம் தேவை யாக உள்ளது. நீலகிரி மாவட்ட அணை கள் மூலம் தினசரி உற்பத்தி செய்யப் படும் 835 மெகாவாட்டில் சுமார் 100 மெகாவாட் நீலகிரி மாவட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலை யில், தென்மேற்கு பருவமழை தாமத மாக தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் பெரிய அளவில் பாதிப்பு ஏற் படவில்லை. ஆனால், ஜூலை மாதம் தொடர்ச்சியாக மழை பெய்ததால் காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் 80 மின்கம்பங்களும், 5 மின் மாற்றிகளும் சேதமடைந்து உள்ளன. இதுவரை 75 மின் கம்பங்கள் மாற்றப் பட்டு விட்டது. மற்ற இடங்களில் மின் கம்பங்கள் மற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் விரை வில் முடிக்கப்படும், என்றனர்.