districts

img

‘108’ மூலம் 75 ஆயிரம் பேர் பயன்

கோவை, ஜன.25- கோவை மாவட்டத்தில் கடந்தாண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 75 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. இதற்காக கோவை மாவட்டத் தில் 66 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. அவை, கவுண்டம்பாளை யம், துடியலூர், அன்னூர், மேட்டுப் பாளையம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சூலூர், கருமத்தம்பட்டி, தடா கம், ஆனைக்கட்டி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு,  பொள்ளாச்சி, வால்பாறை உள்பட 58 பகுதிகளில் இருந்து  ஆம்புலன்சுகள் சேவையற்றி வருகின்றன. பொதுமக்கள் விபத்தில் சிக்கினாலோ அல்லது ஆபத்தான நிலையில் இருந்தாலோ அழைப்பு வந்த உடன் 108 ஆம்புலன்ஸ் சம்பவ  இடத்துக்கு சென்று முதலுதவி மற்றும் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வருவது போன்ற சேவை செய்து  வருகிறது. மேலும், கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போதே, ஆம்புலன்ஸ் ஊழியர் களால் பிரசவம் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக,  மலை பகுதிகளில் வசிக்கும்மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ்  சேவை மிகச்சிறப்பாக பயனளித்து வருகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட திட்ட மேலாளர் செல்வ முத்துக்குமார் கூறுகையில், கோவை மாவட் டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்தாண்டு மட்டும் 75 ஆயிரத்து 631 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 13 ஆயிரத்து 820 சாலை விபத்து, 15 ஆயிரத்து 788 பிரசவ சேவை செய்து உள்ளோம். 49 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்சுகளிலேயே பிரசவம் நடந்து இருக்கிறது. இதில், அதிகபட்சமாக கடந் தாண்டு ஜனவரி மாதம் மட்டும் 7 ஆயிரத்து 572 சேவையை வழங்கி இருக்கிறோம். இதில் ஒரு இடத்தில் இருந்து அழைத் தால் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சராசரியாக 11.57 நிமிடத்துக் குள் சென்று விரைவான சேவையை அளித்து உள்ளோம்.  இதன் மூலம் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட் டுள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.