திருப்பூர், மார்ச் 7 – திருப்பூர் மாநகரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீர மைக்கவும், மண் சாலைகளை தார்ச்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகளாக மாற்றவும் ரூ.63.52 கோடி மதிப்பீட்டில் 748 சாலை பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநக ராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகி யோர் தலைமையில் இப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகு திகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2024-25, மாநில நிதிக்குழு நிதி 2024-25, நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2024-25 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.63 கோடியே 52 லட்சத்தில், 748 சாலைகள் சீரமைக்கப்படு கின்றன. இவற்றில், 111.72 கிலோ மீட்டரில் குடிநீர் குழாய் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அத் துடன், மண் சாலைகளை தார்ச்சாலை மற்றும் சிமென்ட் சாலை களாக மேம்படுத்தும் பணிகளும் துவக்கி வைக்கப்பட்டன. இந்த பணிகளுக்கான துவக்க விழா 13ஆவது வார்டு பள்ளக்காடு தோட்டம் , 2ஆவது வார்டு பூலுவப்பட்டி பிரிவு சௌடாம்பிகா நகர், 47 ஆவது வார்டு யாசின்பாபு நகர், 37ஆவது வார்டு குமரப்பபுரம் 6 ஆவது வீதி ஆகிய இடங்க ளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணி யம், மண்டலத் தலைவர்கள் கோவிந்தசாமி, தம்பி கோவிந் தராஜ், உமா மகேஸ்வரி மாநகர தலைமை பொறியாளர் ஆ. லக்ஷ்மணன், துணை மாநகரப்பொறியாளர் ஆர்.செல்வநா யகம், துணை மாநகரப் பொறியாளர் சி.கண்ணன், உதவி ஆணையர்கள் முருகேசன், வினோத் மற்றும் மாமன்ற உறுப் பினர்கள் அனுசுயாதேவி, சகுந்தலா, மாலதி, ஜெயசுதா ஆகி யோர் கலந்து கொண்டனர்.