ஊழியரை தாக்கி மதுக்கூடத்தை சூறையாடிய 7 பேர் கைது
கோவை, டிச.29- கோவையில் மது போதையில் மதுக்கூடத்தை சூறை யாடி, பார் ஊழியரை தாக்கிய 7 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தை அடுத்த தடாகம் சாலையில் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு பி.என்.புதூர், விவேகானந்தர் வீதியைச் சேர்ந்த ரகுராமன் (20), அவரது நண்பர் கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (23) ஆகியோர் மது அருந்த வந்துள்ளனர். அப்போது குடிபோதையில் இரு வரும் அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனை புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பார் ஊழியர் சேர்மன் ராஜ் (28) என்பவர் கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ரகு ராமனும், அவரது நண்பரும் போன் செய்து மேலும் 7 பேரை அங்கு வரவழைத்தனர். இதன்பின் அங்கு வந்தவர்கள் பார் ஊழியர் சேர்மன்ராஜை, தகாத வார்த்தைகளால் திட்டி பாரில் இருந்த டேபிள் மற்றும் சேர்களை அடித்து உடைத்து சூறை யாடினர். மேலும், சேர்மன்ராஜை பாட்டிலால் தாக்கினர். இதன்பின் தாக்குதலில் தலையில் காயமடைந்த சேர்மன் ராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பார் ஊழியரை தாக்கிய ரகுராமன், தினேஷ் குமார் (23), ஆர்.ஜி.புதூரைச் சேர்ந்த நாகேந்திரன் (31), சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த தனசேகரன் (31), குறிச்சியைச் சேர்ந்த நவீன் (28), வீரகேரளத்தை சேர்ந்த ரமேஷ்குமார் (31), ஆர்.எஸ்.புரம், காமராஜபுரத்தை சேர்ந்த பிரவீன் (30) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். இதன்பின் அவர்களை நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ராமு, அரவிந்தன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
கோவை, டிச.29- கோவை வழியாக சென்ற பெங்களூரு ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் ஒவருர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கேரளா மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் சோமனூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் வஞ்சிப்பாளையம் அருகே வந்த போது, 30 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று தண்டவாளத்துக்கு நடுவே கையை மேலே தூக்கியபடி நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இன்ஜின் ஓட்டுநர் சத்தம் போட்டார். ஆனால், அவர் தண்டவாளத்தை விட்டு விலகி நிற்காமல் ரயில் முன் பாய்ந்தார். இதில், அந்த வாலிபரின் உடல் ரயில் இஞ்சின் கொக்கியில் மாட்டியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் என்ஜின் முன் வாலிபர் உடல் சிக்கி இழுத்து வந்தது. இதன்பின் ரயிலை நிறுத்தி ஓட்டுநர், போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்து காரணமாக ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
காட்டுயானைகளால் பள்ளி சுவரை சேதம்
கோவை, டிச.29- மேட்டுப்பாளையம் அருகே அரசுப்பள்ளியின் சுற்றுச்சுவரை சேதப்படுத் திய காட்டுயானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம டைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி அருகே உள்ள தாசம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 75 மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். தற்போது அரை யாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் விடுமுறை விடப் பட்டுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக பள்ளியில் யாரும் இருப்பதில்லை. இந்நிலையில், வியாழ னன்று அதிகாலை நேரத் தில் அப்பகுதிக்கு வந்த காட்டு யானை கூட்டம், பள்ளியின் சுற்றுச்சுவர் மற்றும் முன்பக்க கதவு களை உடைத்து சேதப்ப டுத்தியது. இதன்பின் யானைகள் அப்பகுதியில் உள்ள கணேசன் என்பவரது தோட்டத்தில் நுழைந்து தென்னை மரங்களையும் சேதப்படுத்தியது. இப்பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து உலா வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். எனவே, வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். இதற்கிடையே வனத் துறையினர் தற்போது சம்பவ இடத்தில் பார்வையிட்டு வரு கின்றனர்.
கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்
நாமக்கல், டிச.29- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்தவர் ஆதிமூர்த்தி (65). இவரது மனைவி அமரா வதி(40). இவர் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் டியூப் வழியாக கேஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆதிமூர்த்தி, அமராவதி, மகள் சுமதி(15), மகன் பிரவீன்குமார்(12)ஆகிய 4 பேரின் கை, கால்களில் காயமடைந்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் 4 பேரை யும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலில் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
தாராபுரம், டிச. 29- தாராபுரம் அருகே கோயிவில் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தாராபுரத்தை அடுத்த ஆச்சியூர்புதூர் பகுதியில் உச்சி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வேலுச் சாமி என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். கடந்த டிச.13 ஆம் தேதியன்று மாலை வேலை முடித்துவிட்டு, கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை யில் வந்து பார்த்தபோது கோவில் கதவு திறந்து கிடந் தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி வேலுசாமி உள்ளே சென்று பார்த்தபோது சாமி கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இதனை யடுத்து பூசாரி வேலுச்சாமி தாராபுரம் குற்றப்பிரிவு போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், புதனன்று அலங்கியம் சாலையில் உள்ள ருத்திரன் கண் மருத்துவமனை அருகே சந்தேகம்படும்படி வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், தாராபுரம் அருகே உள்ள பெருஞ்சிபாளையம் பகு தியைச் சேர்ந்த மணி என்கின்ற கோழி மணி (26) என்பதும், ஆச்சியூர்புதூரில் உள்ள உச்சி மாகாளியம்மன் கோவில் நகையை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரிடமிருந்து இரண்டு பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ரூ. 84 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
தாராபுரம், டிச. 29- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 84 லட்சத் திற்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 325 விவசா யிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண் டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 9 ஆயிரத்து 99 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 550 க்கும் சராசரி விலையாக ரூ. 7 ஆயிரத்து 450 க்கும் விலை போனது. மொத் தம் 3171 மூட்டைகள் 1 ஆயிரத்து 160 குவிண்டால் பருத்தி ரூ. 84 லட்சத்து 37 ஆயிரத்து 924 க்கு விற்பனையானது. இந்த ஏலத் தில் 12 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடு களை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
ரூ. 52 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
திருப்பூர், டிச.29- வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாயன்று ரூ.52 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. கரூர், தேவத்தூர், பச்சூர், முத்தம்பட்டி, கார்வழி, பல்ல டம், புளியம்பட்டி, விராலிமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து 139 விவசாயிகள் தங்களுடைய 1,360 மூட்டைகளில் 70 டன் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந் தனர். ஒரு கிலோ ரூ.61.90 முதல் ரூ.85.70 வரை விற்பனை யானது. சராசரி விலை ரூ. 78.20. கடந்த வார சராசரி விலை ரூ.82.15. ஒட்டு மொத்த விற்பனைத்தொகை ரூ. 52 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட் டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த திருப்பூரில் தயார் நிலையில் மருத்துவத்துறை
திருப்பூர், டிச. 29 – கொரோனா தொற்றுப்பரவல் அதி கரிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர் கொண்டு சமாளிப்பதற்கும், பாதிக்கப்ப டுவோருக்கு சிகிச்சை அளிக்கவும் தயார் நிலையில் இருப்பதாக திருப்பூர் மாவட்ட மருத்துவத் துறை தெரிவித் துள்ளது. பல்வேறு நாடுகளிலும் உருமாறிய கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் அனைத்துப் பகுதிகளி லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு முன்னேற்பாடு பணி களை தீவிரப்படுத்தி, தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளது. இதன்படி செவ்வாயன்று திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் நேரில் ஆய்வு மேற்கொண் டார். கொரோனா தடுப்பூசி, தொற்று பரி சோதனை, பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க படுக்கை வசதி, ஆக்சி ஜன் தேவை, இருப்பு உள்ளிட்ட முன் னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் வினீத் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் முருகேசன் உள்ளிட்ட மருத்துவத் துறை யினருடன் ஆலோசனை மேற்கொண் டார். மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த நிலையில் ஆட்சியர் அங்கி ருந்து புறப்பட்டுச் சென்றார். சம்பிரதாயத்துக்கு ஆய்வா? எனினும் மிகக்குறுகிய நேரம் மட் டுமே ஆட்சியர் அங்கிருந்ததாகவும், ஆறு நிமிடங்களில் அவர் ஆய்வை முடித்து விட்டுப் புறப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது. அவர் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் பற்றி முழு மையாக கவனம் செலுத்தாமல், சம்பிர தாயமாக, அவசரகதியில் இந்த ஆய்வை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் மருத்துவத் துறையினர் இதைத் திட்டவட்டமாக மறுத்தனர். முதல் முறையாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது, அது பற்றிய முன் அனுபவம், சிகிச்சை அளிக்கும் வழிமுறை என்பது தெளிவாகத் தெரி யாமல் இருந்தது. ஆனால் அடுத்தடுத்து இரண்டு, மூன்று அலைகள் ஏற்பட்ட நிலையில், கொரோனா பரவலைக் கட் டுப்படுத்துவது குறித்து மருத்துவத் துறையினருக்கு நல்ல அனுபவம் உள் ளது. அத்துடன் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நெறிமுறைகளை (புரட் டோகால்)அரசு வகுத்து தந்துள்ளது. அதன்படி அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதன் அடிப் படையில் மாவட்ட ஆட்சியர் இங்கு முழுமையாக ஆய்வு செய்தார். எனவே இதைப் பற்றி தெரியாமல் கூறப்படும் விமர்சனங்கள் சரியல்ல என்று திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை முதல்வர் டாக்டர் முருகேசன் பதி லளித்தார்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.71/60அடி நீர்வரத்து:618கன அடி வெளியேற்றம்:54கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.80/90அடி. நீர்வரத்து:450கனஅடி வெளியேற்றம்:313கன அடி
காட்டெருமை தாக்கியதில் ஒருவர் பலி
ஈரோடு, டிச.29- காட்டெருமை தாக்கியதில் தாளவாடியைச் சேர்ந்த வாலி பர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி சாம்ராஜ் நகர் அருகே முதியனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜூ (38) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்நேரத் தில், வனப்பகுதியிலிருந்து குறுக்கே வந்த காட்டெருமை கூட் டம் ராஜூ ஓட்டி வந்த வண்டியின் மீது மோதியது. இதில் ராஜூ நிலை தடுமாறி கீழே விழுந்தார். ஒரு காட்டெருமை யின் கால் ராஜூவின் தலையின் மீது மோதியது. இதனால் ராஜூவின் காதில் ரத்தம் வந்தது. ராஜூவிற்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அதே முதியனூரைச் சேர்ந்த சங்கர் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜூவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைகாக சாம்ராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேல்சிசிக்சைக் காக கோவை அரசு மருத்துவமனையில் ராஜு சேர்க்கப்பட் டார். இந்நிலையில் ராஜூ சிகிச்சை பலனளிக்காமல் மரண மடைந்தார். இதுகுறித்து ஆசனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூய்மை பணி
சூலூர், டிச.28- சூலூர் காவல் நிலை யத்தை அப்பகுதி அரசுப் பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்தனர். சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம் நடை பெற்று வருகி றது. இந்த நாட்டு நலப்பணி திட்ட முகாமில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் 25 பேர் ஒன்றிணைந்து, குழுக்களாக காவல் நிலையத்தை சுத் தம் செய்தனர். காவல் நிலை யத்தில் உள்ள கார்டனை சுத்தம் செய்த மாணவர்கள், குப்பைகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தில் உள்ள பூங் காவை சுத்தம் செய்து, அங் குள்ள செடிகள் மற்றும் மரங்களுக்கு தண்ணீர் செல் லும் வகையில் பாத்திகள் அமைத்தனர். இதைத்தொ டர்ந்து காவல் நிலையம் எவ் வாறு செயல்படுகிறது? என் பது குறித்தும், சாலை பாது காப்பு, சுற்றுப்புறத்தை தூய் மையாக வைத்துக் கொள்வ தன் அவசியம் குறித்தும், காவல் ஆய்வாளர் மாதை யன் மாணவர்களுக்கு எடுத் துரைத்தார்.
சீனாவிலிருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா
கோவை, டிச.29- சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக விமானத்தில் கோவை வந்த பயணிக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா பல நாடு களில் வேகமாக பரவி வருகிறது. இந்தி யாவில் அதன் பரவலை தடுக்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. அதன்படி சீனாவிலிருந்து விமா னங்களில் வரும் பயணிகளுக்கு கட்டா யமாக கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து விமான நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திலும் வெளி நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது. கோவை விமான நிலை யத்திலிருந்து சீனாவுக்கு நேரடி விமான சேவை இல்லை. இருந்தபோதிலும் சீனாவிலிருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் வழியாக கோவை விமான நிலையம் வரலாம். அவ்வாறு சீனாவில் இருந்து சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவை விமான நிலையத்தில் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில், புதனன்று இரவு சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமா னத்தில் 167 பயணிகள் வந்து இறங்கி னர். அவர்களில் சேலத்தை சேர்ந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது அவர் சீனாவிலி ருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்ததும், அவரை போன்று மற்றொருவரும் சீனாவிலி ருந்து வந்ததும் தெரியவந்தது. இதை யடுத்து இருவருக்கும் கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டது. அதன் முடிவில் சேலத்தை சேர்ந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும், அவ ருக்கு எந்த வகையான கொரோனா தொற்று என்பது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வரு கிறார்கள். இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு கொரோனா பாதிப்புக்குள்ளான வரை தனிப்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு உள்ளது. மேலும், அவருடன் கோவை வந்த விமான பயணிகளுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. அந்த விமானத்தில் வந்த கோவை பயணிகளையும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களிடம் தனிமைப்படுத்தி கொள்ள வும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
போலீசாரை சுற்றி வளைத்த காட்டுயானைகள்
உதகை, டிச.29- மஞ்சூர் அருகே உள்ள கெத்தை அணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை 4 மணி நேரம் யானைகள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், மஞ்சூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக 7 யானைகள் கொண்ட கூட்டம் சுற்றி வருகிறது. இவை அவ்வப் போது அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டி களை வழிமறித்து வருகின்றன. இதனால் கெத்தை மின் நிலையம் அருகே பொதுமக் கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட பென்ஸ்டாக் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செவ்வாயன்று இரவு பணி முடிந்து, மின்வாரியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கியிருந்தனர். அப்போது நள் ளிரவில் காட்டு யானைகள் கூட்டம் அந்த அறையை சுற்றி நீண்ட நேரமாக நின்று கொண் டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், அறைக்குள் இருந்த மின் விளக் குகளை அனைத்து உடனடியாக போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய் வாளர் சசிகுமார் தலைமையான போலீ சார் மற்றும் வன காவலர் துறையினர் ஆகி யோர் பட்டாசுகளை வெடிக்க செய்தனர். இத னால் யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென் றன. இதைத்தொடர்ந்து கட்டிடத்திற்குள் இருந்த போலீசார், உடனடியாக அங்கிருந்து வெளியேறி வாகனத்தில் ஏறி மஞ்சூர் காவல் நிலையம் சென்று விட்டனர். முன்னதாக காட்டு யானைகள், போலீசாரே 4 மணி நேரம் சிறை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காட்டு யானைகள் அந்த பகு தியை விட்டு சென்று விட்டதா? அல்லது அங்கு சுற்றி வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலை மையில் வனவர்கள் பிச்சை, சுரேஷ், வனக் காப்பாளர் அர்ஜூன் உள்ளிட்ட வனத்துறையி னர் நேரில் சென்று பார்வையிட்டு வரு கின்றனர்.
காவலர்களுக்கான கவாத்து பயிற்சி நிறைவு
கோவை, டிச.29- கோவையில் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந் திர படைதிரட்டு கவாத்து பயிற்சி புதனன்று நிறைவுபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையாளர் வி.பாலகிருஷ் ணன் அறிவுரையின்படி, கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களுக்கு கடந்த டிச.9ம் தேதி முதல் செவ்வாயன்று வரை வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலகக் கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு பணிகள், மன நலம் மற்றும் உடல் நலத்தை பேணுதல், ஆரோக்கியமான உணவு முறை போன்ற பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில், சுமார் 550 போலீசார் பயிற்சி பெற்றனர். பயிற்சியின் நிறைவு நாளான புதனன்று கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ் ணன் கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்ற அலங்கார அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு அணிவகுப்பு கவாத்தினை பார்வையிட்டார். இதில், மாநகர காவல் துறையில் பயன்பாட்டில் இருந்து வரும் அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு செய்து ஆயுதப்படை காவலர்களுக்கும், காவல் வாகன ஓட்டுநர்க ளுக்கும் அறிவுரை வழங்கினார். மேலும், காவலர்களிடம் தேவைகளை கேட்டறிந்து, காவலர்களின் பல்வேறு தேவை கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும், என்றார்.