districts

புதுமைப்பெண் திட்டத்தில் 6964 மாணவிகள் பயன்

கோவை, ஆக.22- மூவலுார் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 6964 மாணவிகள் மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருவதாக ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து மேலும் அவர் கூறு கையில், தமிழக அரசு பெண்கள்,  குழந்தைகள், மூத்த குடிமக்கள்,  திருநங்கையர் உள்ளிட்டோரின் நலன் காக்க பல்வேறு நலத்திட் டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்கல்வியை போற்றும்விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்திட “புதுமைப் பெண்” திட்டத்தை  தமிழ்நாடு அரசு உருவாக்கி யுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி களில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதி கரிக்கும் வகையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்  உயர்கல்வி உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி களில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை  பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000  உதவித்தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழ் நாடு முதல்வர் முதற்கட்டமாக 05.09.2022 அன்றும், இரண்டாம் கட்டமாக 08.02.2023 அன்றும் தொடங்கி வைத்தார்.  மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில்  படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்,  தனியார் பள்ளியில் Right to  Eduction-ன் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்ற  பின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம்  வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.  மேலும், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாது காப்புத் திட்டமானது,  

கல்வியை  மேம்படுத்துதல் பெண் சிசு கொலை ஒழித்தல், ஆண் குழந் தையை மட்டுமே விரும்பும் மணப் போக்கை மட்டுப்படுத்துதல், சிறு குடும்ப முறை  ஊக்குவித்தல், ஏழை  குடும்பங்களில் பெண்குழந்தை களுக்கு நல்வாழ்வு அளித்தல் மற்றும் பெண்களின் மதிப்பை உயர்த்துத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  கோவை மாவட்டத்தில் புது மைப்பெண் திட்டத்தின்  முதற்கட் டத்தில் 2959 உயர்கல்வி பயிலும்   மாணவிகளும், இரண்டாம் கட் டத்தில் 4005 உயர்கல்வி பயிலும்  மாணவிகளும்  என மொத்தம் 6964  மாணவிகள் புதுமைப் பெண் திட்டத் தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித் தொகை பெற்று பயனடைந்து வரு கின்றனர். மேலும், முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் சமூக நலத்துறையின்  சார்பில் கடந்த 2021 -  2022 ஆம் நிதியாண்டில் 1236 பய னாளிகளுக்கு தலா ரூ.25000 வீதம்  ரூ. 3.09 கோடி மதிப்பிலும்,  2022 -  2023 ஆம் நிதியாண்டில் 1298  பய னாளிகளுக்கு தலா  ரூ.25,000 வீதம்  ரூ.3.24 கோடி மதிப்பிலும் என மொத்தம் 2534 பயனாளிகளுக்கு ரூ.6.33 கோடி மதிப்பில் வைப்பு  நிதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு டுள்ளது என்றார்.