மேட்டுப்பாளையம், ஜூலை 3- பசுமை வனம் என்ற தலைப்பில் ஒரே பகுதியில் 6000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்காரம்பாளையம் கிராமத்தில் பசுமை வனம் என்ற தலைப்பில் சுமார் 6000 மரக்கன்றுகள் ஒரே பகுதியில் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச் சியை சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மற்றும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாண வியர் மற்றும் காரமடை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், சுமார் 6000 மரக்கன் றுகளை ஒரே நேரத்தில் நடவு செய்தனர். இதில், வேம்பு, அரசன், புங்கன், பூவரசன், உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட மண்ணுக்கேற்ற பாரம்பரிய மர வகைகள் நடவு செய்யப்பட்டது.