districts

img

600 மரக்கன்றுகள் நடும் விழா

பொள்ளாச்சி, ஜூன் 29- பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில், 600 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.  கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி, வளாகத்தில் டிஎன் கிரீன் கிரேட் டர்ஸ் அமைப்பு மற்றும் கலை அறிவியல் கல்லூரி என்எஸ் எஸ் மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும்  விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில், பொள்ளாச்சி சார்  ஆட்சியர் அ.கேத்தரின் சரண்யா, துணை காவல் கண்காணிப் பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் உ. சுமதி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.