districts

img

திருப்பூரில் நொய்யல் நதிக்கரையில் 500 மரங்கள் நடப்பட்டன

திருப்பூர், செப். 5 - திருப்பூர் நகரில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் போடப்பட் டுள்ள நொய்யல் நதிக்கரை சாலையில் 500 மரங்கள் நடப் பட்டன. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்கு மார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் தலைமையில் நொய்யல்   நதிக்கரையில் திருப்பூர் மாநகராட்சியும், வெற்றி அறக்கட்ட ளையும் இணைந்து நொய்யல் நதிக்கரையில் மரங்களை நட்டு  வைத்தனர். மூன்றாவது மண்டலம் 35 ஆவது வார்டு ரோட்டரி  மின் மயானம் அருகில்  உள்ள நொய்யல் நதிக் கரையின் வடக்கு, தெற்குப் பகுதியில் திருப்பூர் மாநகராட்சியும், வெற்றி  அறக்கட்டளையும் இணைந்து நொய்யல் நதிக்கரையின் சீர் மிகு நகர திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சாலையின் ஓரத்தில்  500 மரங்கள் நடப்பட்டது. மேலும், தன்னார்வ அமைப்புகளு டன் இணைந்து மாநகராட்சிக்கு உட்பட்ட திறந்த வெளியி டங்கள் மற்றும் சாலைகளின் சென்டர் மீடியன் ஆகிய இடங் களை பசுமையாக மாற்ற, மரங்கள் நடும் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், மாநகர நல அலுவலர் மருத்துவர் கௌரி சரவணன், தலைமை  பொறியாளர் (பொ) செல்வநாயகம், உதவி ஆணையாளர் (மண்டலம் 3 மற்றும் 4) ஆர்.வினோத், 35 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தூர் முத்து கிருஷ்ணன், 34  ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்,  வனத்துக்குள்  திருப்பூர் நிறுவனர் சிவராம் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.