தாராபுரம், ஆக. 2- தாராபுரம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் கூறியிருப்பதா வது, மதுரையிலிருந்து கோவையிலுள்ள தனியார் கல்லூரி யில், 4 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள் கிரு பாகரன்(24), சஞ்சய்(24) உறவினர் சந்திரன் (60) ஆகிய மூவ ரும் தாராபுரம் வழியாக நான்கு வழிச்சாலையில் கோவையை நோக்கி கோனாபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த னர். அப்போது திருப்பூரிலிருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த விஜயகுமார் (35) மற்றும் சிவகுமார் (42) ஆகியோரின் கார் டயர் திடீரென வெடித்தது. அதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கோவை நோக்கி எதிர் திசையில் சென்று கொண்டிருந்த காரின் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. ஒன்றுடன் ஒன்று மோதிய கார்கள் அப்பளம் போல நொறுங்கி யது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இடர்பாடுகளில் சிக்கி இருந்த நபர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் மருத்துவமனைகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.