சேலம், மே 16- ஏற்காட்டில் 46 ஆவது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி மே 21 முதல் 28 வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட் சியர் செ.கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா, மலர்க்கண்காட்சி ஆண்டுதோ றும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் 46 ஆவது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி மே 21 ஆம் தேதியன்று துவங்கி, மே 28 ஆம் தேதியன்று வரை 8 நாட்கள் நடை பெற உள்ளது. இவ்விழாவில் நக ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, இக்கோடை விழா வில் குழந்தைகள், சுற்றுலா பயணி கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அண்ணா பூங்கா வில் பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிரேகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர் பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள் ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண மலர் களைக் கொண்டு வடிவமைக்கப்பட வுள்ளது.
மேலும், பார்வையாளர்க ளின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா, டோரினியம், சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர் களை கொண்டு 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சி யில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், இம்மலர்க்கண்காட்சி யில் மலைப்பகுதிகளில் விளையக் கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்பட வுள்ளது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பய ணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்), கைப்பந்து போட்டி கள், கயிறு இழுத்தல் போட்டிகள், மராத்தான், சைக்கிளிங், சிலம்பம், படகு போட்டி, கிரிக்கெட் போட்டி கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம் பரிய உணவுப் போட்டி, மகளிர் திட் டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மேலும், கால் நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண் காட்சி மற்றும் சுற்றுலாத்துறை, கலைப் பண்பாட்டுத்துறை ஆகிய துறைக ளின் சார்பில் நாள்தோறும் பல்வேறு இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடத் தப்படவுள்ளது, என தெரிவிக்கப்பட் டுள்ளது.