districts

img

பென்னாகரம் இடையே 4 வழிச்சலையாக விரிவாக்கம் செய்திடுக

தருமபுரி, டிச.4 ஒகேனக்கல்லுக்கு நாளுக்கு நாள்  அதிகரிக்கும் வாகன போக்குவரத்தால் தருமபுரி-பென்னாகரம் இடையே 4 வழி சாலை விரிவாக்கம் செய்யும் பணியை உடனே தொடங்க வேண்டும்  என பொதுமக்கள் மாவட்ட நிர்வா கத்தை வலியுறுத்தியுள்ளனர்.  தருமபுரி மாவட்டத்தில் உள்ள முக் கிய சாலைகளில் ஒன்றாக தருமபுரி-பென்னாகரம் - ஒகேனக்கல் சாலை  உள்ளது. முக்கிய சுற்றுலா மையங்க ளில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு ஆயி ரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன. இந்த சாலையில் நாகதாசம் பட்டி பகுதியில் பாப்பாரப்பட்டி- பாலக் கோடு சாலையும் இணைகிறது. இந்த சாலை வழியாக கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிக ளில் இருந்து ஒகேனக் கல்லுக்கு வாக னங்களில் சுற்றுலா வந்து செல்கின்ற னர். தருமபுரி சாலை மார்க்கமாக ஒகேனக்கல்லுக்கு ஒவ்வொரு மாதமும்  1 லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை  சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார் கள். குறிப்பாக விடுமுறை நாட்களில்  இந்த சாலை வழியாக ஆயிரக்கணக் கான கார்கள் மற்றும் பேருந்துகள், பிற  வகை - வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி சிப்காட் தொழிற் பேட்டை  அமைய இருக்கிறது. சுற்றுலா வாகனங் களோடு பிற கனரக வாகனங்களும் இந்த சாலை வழியாக அதிக  அளவில் சென்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தருமபுரி-பென்னாக ரம் சாலையில் ஏற்கனவே சுமார் 8 கிலோ மீட்டர் நீளம் 4 வழி சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஒகேனக்கல் மற்றும் கிருஷ்ணகிரி சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்க ளுக்கு இந்த சாலை வழியாகவும் செல்ல லாம். இந்த சாலையில் அதிக வாகன  போக்குவரத்து என்பதால் விபத்துக்கள்  அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் உயர் சேதமும் ஏற்படுகிறது.  அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலையில் முதல் கட்ட மாக பென்னாகரம் வரை உள்ள 24 கி.மீ.  நீளத்திற்கு 4 வழி சாலையாக விரி  வாக்கம் செய்யும் திட்டத்தை செயல்ப டுத்த வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.