districts

img

குறைதீர்க்கும் நாளில் 350 மனுக்கள்

திருப்பூர், பிப்.26- திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் திங்க ளன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 350 மனுக்களை  பொதுமக்கள் வருவாய் அலுவலரிடம் அளித்துள்ளனர். இந்நிகழ்வில், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வரலட் சுமி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்)  குமாரராஜா,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலர் செல்வி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.