திருப்பூர், மார்ச் 25- புரட்சியாளர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்ததானம் செய்தனர். புரட்சியாளர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு மாநகரம் முருங்கப்பாளையம் கிளை சார்பில் ஞாயிற்றுக்கிழமை அரசு மருத்துவ கல் லூரி மருத்துவமனைக்காக ரத்ததான முகாம் வாலிபர் சங்க கிளை அலுவலகத் தில் நடைபெற்றது. முன்னாள் வாலிபர் சங்கத் தலைவர் பி.ஆர்.கணேசன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் எஸ். அருள், ரத்ததான கண்வீனர் எஸ்.விவேக், வடக்கு மாநகரக் குழு தலைவர் எஸ்.கண்ணன், பொருளாளர் கீர்த்திவா சன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், 35 பேர் ரத்ததானம் செய்தனர். திருப்பூர் வடக்கு ஒன்றியம்: புரட்சியாளர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் நினைவு தினத்தை, வாலிபர் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றி யம் அங்கேரிபாளையம் கிளை சார்பில் பள்ளி, மாணவ மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருப் பூர் வடக்கு ஒன்றியத் தலைவர் ரேவந்த், செயலாளர் சந்தோஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் நரேந்திரபிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.