districts

விநாயகர் சதுர்த்தி வசூல் பிரச்சனை ஆரம்பம் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

கோவை, ஆக 29- விநாயகர் சதூர்த்தி நெருங்கி னாலே இந்துத்துவ அமைப்பினருக்கு வசூலை பங்கு பிரிப்பதில் தகறாறு ஏற் படுவது வழக்கம். அந்த வகையில் கடந் தாண்டு விநாயகர் சதூர்த்தி கொண்டா டுவது குறித்து சங்பரிவார அமைப்புக ளுக்குள் எழுந்த பிரச்சனை தற்போது வெடித்ததில், கோவை பாஜக பிரமு கருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள் ளது. இதுதொடர்பாக சங்பரிவார அமைப் புகளை சேர்ந்து மூவர் கைது செய் யப்பட்டுள்ளனர். கோவை, சீரநாயக்கன்பாளையம் ஆர்.ஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவர் ஆர்.எஸ் புரம் மண்டல பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள் ளார். சதீஷ் புதனன்று இரவு தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே நின்று  கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு கும்பல் அரிவாள், கத்தியுடன் சதீஷை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் வைத்திருந்து அரிவாள் கத்தியால் சதீஷசை சராசரியாக வெட்டி னர். இதில் அவரது வலது கை, மணிக் கட்டு, உள்ளங்கை உள்ளிட்ட இடங்க ளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் சதீஷ் ரத்த வெள்ளத்தில் கூச்ச லிட்டபடி சாலையில் ஓடினார். அவரது சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். இத னைப் பார்த்ததும் அந்த கும்பல் அங்கி ருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து ஆர்.எஸ் புரம் போலீசா ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடன டியாக காவல் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று சதீஷை மீட்டு சிகிச்சைக்காக கோவை - மேட்டுப்பா ளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். காவல் துறையினரின் விசாரணை யில் முன் விரோதத்தில் இந்த கொலை  முயற்சி சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது.  இதில், கடந்தாண்டு விநாயகர் சதுர்த் தியின் போது சதீஷுக்கும், சித்தி விநாய கர் கோவில் வீதியைச் சேர்ந்த விஷ்ணு  என்பவருக்கும் இடையே தகராறு ஏற் பட்டுள்ளது. அப்பொழுது விஷ்ணு வுக்கு ஆதரவாக அவரது உறவினர்க ளான பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த  வேலுச்சாமி என்பவருடைய மகன்கள் பிரபு மற்றும் சந்தோஷ் ஆகியோர் செயல்பட்டு உள்ளனர். இந்நிலையில் சதீ ஷின் நண்பர் வினீத்தை பிரபு, சந்தோஷ்  ஆகியோர் தாக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சதீஷ் தன்னுடைய நண்பர் பாலாஜி என்பவருடன் சேர்ந்து பிரபு, சந்தோஷ் ஆகியோரை தாக்கி உள்ளார். மாறி, மாறி கோஷ்டியாக மோதிக்கொண்டதால் முன்விரோதம் வளர்ந்து உள்ளது. இதனால் சதீஷ் தரப்பில் சமாதானம் பேச சென்று உள் ளனர். சமாதான பேச்சை ஏற்காத பிரபு குடும்பத்தினர் சதீஷை தீர்த்து கட்ட முடி வெடுத்துள்ளனர்.  இந்நிலையில் தான் சதீஷசை தீர்த்து  கட்டுவதற்காக கும்பலுடன் வந்து அரி வாளால் வெட்டியது தெரியவந்தது. இந்த கொலை முயற்சி தொடர்பாக ஆர்.எஸ் புரம் போலீசார் பிரபு அவரு டைய தம்பி சந்தோஷ் தந்தை வேலுச் சாமி பிரபுவின் நண்பர்களான சுள்ளான்  என்ற சூரிய பிரபு, சரவணன், கோகுல் உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் வேலுச்சாமி சரவ ணன் கோகுல் ஆகியோர் போலீசார் கைது செய்தனர். மேலும், ஐந்து பேரை  தேடி வருகின்றனர். இவரிடம் இருந்து  கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங் களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான வேலுச்சாமி மீது பல்வேறு  வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக் கது. இதற்கிடையே, பாஜக பிரமுகரை வெட்டிய சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் எனவும், ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தை முற்றுகை யிடப்போதாக பாஜக தலைமை அறி வித்தது.  இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பாஜகவின் தலைமை நிர்வாகிகளிடம், விநாயகர் சதூர்த்தி வசூலில் பங்கு பிரிப் பதில் ஏற்பட்ட தகறாறு எனவும், உங்க ஆளுக்குள்ளேயே வெட்டிகிட்டாங்க, மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கி றார்கள் என போலீசார் தெரிவித்தவு டன், ஜர்க் ஆன பாஜகவினர், போலீசா ரின் உறுதி மொழியை ஏற்று போராட் டத்தை கைவிடுவதாக சொல்லி பாஜக வினர் எஸ்கேப் ஆகினர்.