பொள்ளாச்சி, ஜன.24- பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசியை கடத்த முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். பொள்ளாச்சியிலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை கட்டுப்படுத்த காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகளின் கண்களில் தென்படாதவாறு, கிராமப் புறங்கள் வழியாக செல்லும் சாலைகளை பயன்படுத்தி ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு நாட்க ளின் போது அத்தியாவசிய பொருட்கள் எனக்கூறி, சரக்கு வாகனங்களில் ரேசன் அரிசியை பதுக்கி கடத்துவதாக வும், குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீசாருக்கு புகார் வந்தது. இந்நிலையில், ஞாயிறன்று நடுப்புணி அருகே சென் றாம்பாளையம் பாலம் அருகே, காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில், சுமார் 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேசன் அரிசிகள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், பொள்ளாச்சி யில் பல்வேறு இடங்களில் குறைந்த விலைக்கு ரேசன் அரிசி வாங்கி, கேரளாவுக்கு கடந்த முயன்றது தெரியவந் தது. இதையடுத்து ஓட்டுநர் ராஜா மன்சூர் அலி (38), மணி கண்டன் (35), சக்திவேல் (36) ஆகியோரை காவல்துறையி னர் கைது செய்து, வாகனத்தையும் ரேசன் அரிசியையும் பறி முதல் செய்தனர்.