districts

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 ஆவது நாளாக சோதனை

சேலம், செப்.21- முறைகேடு புகார் தொடர்பாக மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2  ஆவது நாளாக வியாழனன்று வரு மான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகின் றன. இந்த 2 அனல் மின் நிலையங்களி லும் சென்னையை தலைமையிட மாக கொண்டு இயங்கும் தனியார்  பொறியியல் நிறுவனம் நிலக்கரி கையா ளும் பிரிவு, முதன்மை அரவை மற் றும் 2 ஆம் நிலை அரவை, கொதி கலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத் துள்ளது. இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந் தங்களையும் இந்நிறுவனம் மேற் கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின் சார வாரியத்திற்கு விநியோகம் செய்த பொருட்களில் இந்நிறுவ னம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார்கள் எழுந் தது. இதன் காரணமாக அந்நிறு வனத்துக்கு சொந்தமான 40க்கும் மேற் பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதனன்று காலை  முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் மேட்டூர் அனல் மின் நிலைய பணிகளுக்கான பொருட் கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப் பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல் மின் நிலை யத்தில் செயல்பட்டு வரும் இந்த தனி யார் நிறுவனத்தில் புதனன்று காலை  7 மணிக்கு வருமான வரித்துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத் தினர். இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினியில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய் தனர். மேலும், அங்கு பணியாற்றிய ஊழியர்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது. வருமான வரித்துறையினரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரி கிறது. ஆனால், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தக வல்களையும் அதிகாரிகள் தெரி விக்கவில்லை. இந்நிலையில், வியா ழனன்று 2 ஆவது நாளாக மேட்டூர் அனல் மின்நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.