districts

img

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியில் 27 பேர் காயம்

நாமக்கல், ஜன.28- குமாரபாளையத்தில் ஞாயி றன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட் டியில், 27 மாடுபிடி வீரர்கள் காயம டைந்தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில், 8 ஆவது ஆண்டாக ஞாயி றன்று ஜல்லிக்கட்டு போட்டி குமார பாளையம் - சேலம் நெடுஞ்சாலையி லுள்ள தனியார் கல்லூரி பின்புறம் நடைபெற்றது. இப்போட்டியை தமிழ் நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் மற்றும் திருச்செங்கோடு  வருவாய் கோட்டாட்சியர் வசந்தி ஆகி யோர் கொடியசைத்து தொடங்கி வைத் தனர். முன்னதாக, வருவாய் கோட் டாட்சியர் சுகந்தி உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற் றனர். தொடர்ந்து மாடுகள் அவிழ்த்து  விடப்பட்டன. சிறந்த 10 மாடிபிடி வீரர் களுக்கு ஒரு கிராம் தங்கக்காசு, 130 பேருக்கு 10 கிராம் வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், ட்ரெஸ்ஸிங்க் டேபிள், குக்கர், மிக்சி  உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங் கப்பட்டன. போட்டியின்போது ஏற் பட்ட பதற்றத்தின் காரணமாக சுமார்  40 நிமிடம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் நடைபெற்ற ஜல் லிக்கட்டு நிகழ்ச்சியில், 342 மாடுகள் மட்டுமே களத்தில் விடப்பட்டன. போதிய நேரம் இல்லாததால் போட் டியை வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி மாலை 4.35 மணிக்கு முடித்து வைத் தார். மீதமுள்ள காளைகளுக்கு ஆறு தல் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 27 மாடு பிடி வீரர்கள் காயமடைந்தனர். ஒரு  மாட்டின் உரிமையாளருக்கு மட்டும் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் மாடு களை தடுத்து நிறுத்த கதவினை வேக மாக சாத்தும் போது, கால் சிக்கிய தில் ஐந்து விரல்கள் துண்டானது குறிப்பிடத்தக்கது. இதில், சுற்று வட் டார பகுதிகளைச் சேர்ந்த ஏராள மான ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், பொதுமக்களும் போட்டியை ரசித்த னர்.