districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் தர்ணா

திருப்பூர், ஜூலை 31 - பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறை ஓய்வூதியர்க ளுக்கு 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் பென்சன் மாற்றத்தை  அமலாக்கி வழங்க வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத் தின் ஒரு பகுதியாக திருப்பூர் மெயின் தொலைபேசி நிலைய  வளாகத்தில் திங்களன்று தர்ணா போராட்டம் நடைபெற் றது. ஓய்வூதியர் சங்கத்தின் பி.ரத்தினம் தலைமையில் கிளைச்  செயலர் விஸ்வநாதன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி னார். இதில் ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் வெங்கட்ராமன், குமார், சௌந்தரபாண்டியன், குமரவேல், ஜி.சண்முகம், முகம்மது ஜாபர் உள்ளிட்டோர் பேசினர். சுமார் நூறு பேர்  கலந்து கொண்டனர்.