கோவை, நவ.28- கோவையில் ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவத் தில், 5 தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். கோவை, காந்திபுரம் 100 அடி சாலை யில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் உள்ளது. இந்த கடையில் தினமும் ஏராளமானோர் வந்து நகைகளை வாங்கி சென்று வரு கின்றனர். இந்நிலையில், திங்களன்று வழக்கம் போல் கடையை மூடி சென் றுள்ளனர். இந்நிலையில் செவ்வா யன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரி யவந்தது. இதனைக்கண்ட அதிகாரி கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத் தில் மாநகர காவல்துறை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, செய்தி யாளர்களிடம் காவல் ஆணையர் பால கிருஷ்ணன் கூறுகையில், சிசிடிவி காட் சியில் ஒருவர் மட்டுமே வந்து கொள்ளை யடித்து சென்றிருப்பது பதிவாகி உள் ளது. இங்கேயே 12 நபர்கள் தங்கி உள்ள நிலையில் அவர்கள் யாரும் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார் கள். சம்பவ இடத்தில் தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுதொடர் பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளது. கூடிய விரைவில் குற்றவா ளியை பிடித்து விடலாம். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் பொழுது ஒரு நபர் தான் தென்படுகி றார். கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் உள்ளார்களா என்பது தொடர் பாகவும் விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்த சம்பவத்தில் சுமார் 150 லிருந்து 200 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சம்பவத்தில் ஈடப்பட்டவர் உள்ளே சென்ற பொழுது முகத்தை மறைத்த தாக தெரிகிறது ஆனால் முகமூடி எது வும் போடவில்லை. தற்பொழுது ஆய்வு செய்த பட்சத் தில் ஏசி வென்டிலேட்டர் வழியாக சென்றதாக தெரிகிறது. அண்மையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதால் அந்த பணிகளை மேற்கொண்டவர் களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. மேலும், கடைகளுக்கு வெளியில் உள்ள கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். சம்பவத்தில் ஈடு பட்டவர் வெளியூர் காரர் போல் தெரிய வில்லை, சம்பவத்தில் ஈடுபட்டவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரி கிறது எனவே அவற்றையெல்லாம் ஆலோசித்து வருகிறோம். தொடர் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது, என் றார்.