districts

img

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டு சிறை

உதகை, ஏப்.29- 7 வயது சிறுமியை பாலி யல் வன்கொடுமை செய்த வழக்கில், வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகிளா நீதி மன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், பிக் கட்டி பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் என்ற மணிகண்டன் (26). இவர் அதேபகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கூலித்  தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜன.31 ஆம் தேதியன்று அப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ள்ளார். இதுகுறித்து உதகை புறநகர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.இந்த வழக்கா னது உதகை மகிளா நீதிமன்றத் தில் நடைபெற்று வந்த நிலை யில், வியாழனன்று தீர்ப்பு வழங் கப்பட்டது. இதில் குற்றவாளி மணிகண் டனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.